![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgT6vqPeMa0PrMqEb4Ch9wb4tOqD4RkGp8GnPPW3PPvPLlgY4yJX0gScTFFZd4xA2_UStMMcPDtm_wr0_yv5IVablZY9US9fDSK63IJfQ3KuOLmJWRTopnb7KYKuVV5CaMH1KYexgD4UqqS/s1600/1112.png)
சிறு குழந்தைபோல
சிறிதும் விருப்பமின்றி
அலறி கதறி அழுது
அடம்பிடிக்கிறேன் நான்...!
கருணையேதும் இல்லாமல்
கனவெனும் இலையில் பரிமாறி - என்
உயிர்வாய் திறந்து
உள்ளே திணித்துக்கொண்டிருக்கிறது...!
உதறிச்செல்லவோ,
உமிழ்ந்துதள்ளவோ வழியேதுமில்லை...!
இமைகளை இறுக்கி அடைத்தே
உயிருக்குள் விழுங்குகிறேன்...!!
இரவுகள் எனக்கூட்டும்
உன் நினைவுகளை...
---- அனீஷ் ஜெ...
![](https://1.bp.blogspot.com/-mllm8XA2qPc/YHiHc3V7npI/AAAAAAAACw0/EI1FO9_QgCszC5dpB07dtlDTw84rmWH4gCLcBGAsYHQ/s0/glsbanner11.gif)
0 விமர்சனங்கள்: