8 Dec 2015

சிறு மழை - பெரும் வெள்ளம்

சிறு மழை - பெரும் வெள்ளம்


சிறு துளியாய்
வெறும் தரையில் விழுந்தது...!
முதல் மழைத்துளி...

சிறுதுளிகளெல்லாம்
சங்கீதாமாய் பொழிய
தூறல் மழை சாரலானது...!

அடைமழை அழகாய் விழ
குடை பிடிக்கவும் பிடிக்கவில்லை...!

நிலவின் குளிரும்
நீல வானின் அழகும் போல - என்
மேலே விழுந்தது மழை...!

சுகமாய் நனந்தேன் நான்...!

மேக கூட்டங்கள் - அதன்
தேகம் கரையும் வரை
கொட்டித்தீர்த்தது மழை...!

பாதத்தை தொட்டிருந்த மழையோ
என்னி
ல்  பாதியை
எட்டியிருந்தது இப்போது...!

கால்கள் இரண்டும்
கடும் வெள்ளத்தில் சிக்கிக்கொள்ள
நீந்து முயற்சிகளில்
மீண்டும் மீண்டும் தோற்கிறேன் நான்...!

மழையோ நின்றபாடில்லை...!

முகம் நோக்கி
முன்னேறும் வெள்ளம் - என்னை
மூழ்கடிக்கும் முன்
மூச்சை இழக்காமல் தப்பிக்கவேண்டும்...!

முயற்சிகள் ஏனோ பலனளிக்கவில்லை...!

கடைசியில்
தோற்றே போகிறேன்...!
மூழ்கியே மூச்சை இழ்ந்துவிட்டேன் நான்...!

சில மழைகளுக்கு
மனசாட்
சியே இருப்பதில்லை...!
சுகமாய் விழ ஆரம்பித்து - பின்பு
சுக்குநூறாக்கி,
கடைசியில்
கண்மூடித்தனாய் கொன்றே விடுகிறது...!
சில காதல்களை போல...

----அனீஷ் ஜெ...




30 Nov 2015

கனவு ஒரு கதை சொல்லியது !

கனவு ஒரு கதை சொல்லியது !


சிறகில்லா
தேவதையாய் அவள்...!

எனறோ ஒருநாள்
பேசி மறந்து,
சந்தித்து பிரிந்ததுபோல்
ஞாபகம்...!

பலநாள் பழக்கமென
அருகில் வந்து நலமா என்றாள்...!

கைகால் உதறி,
வாய் உளறி
நலமென்றேன் நான்...!

என் விசாரிப்பை
எதிர்பார்க்காதவளாய்
தொடர்ந்தாள் அவள்...!

அன்று ஏதோ கொஞ்சம் பேசினோம்...!
சில நாள் சந்திப்புக்குபின்
ஏதேதோ பேசினோம்...!

இதயங்கள் இடைவெளி குறைத்து,
காதலாய் கட்டியணைத்தது...!

காதல் பகிர்ந்து,
கவலை மறந்து,
கதை சொல்லி,
இடை கிள்ளி,
இதழ் சுவைத்து,
இதயம் மகிழ்ந்தோம்...!

காரணங்கள் தெரியவில்லை...!
ஏதோ ஒரு நொடியில்
எதற்காகவோ பிரிந்தோம்..!

பின்பு இதுவரை
சந்திக்கவேயில்லை...!

மனம் மட்டும்
அவள் நினைவில்
கனத்துக்கொண்டிருந்தது...!

எதிர் வீட்டு சேவல்,
என்னருகில் அலாரம்
எல்லாமே ஒருசேர கத்த
கண்விழித்துக்கொண்டேன் நான்...!

விழித்த பின்புதான்
விளங்கியது...!
கனவு எனக்கொரு
கதை சொல்லிக்கொண்டிருந்தது...!

எனக்குள் சிரித்துக்கொண்டே
எழுந்தேன் நான்...!

ஆனால்...
நிஜமென்றாலும் கனவென்றாலும்
பிரிவின் வலி பெரியது என
இன்னொரு கதை சொல்லியது...!
எனக்கே தெரியாமல்
என் இமைகளில் ஒட்டியிருந்த
ஒரு துளி கண்ணீர்...

----அனீஷ் ஜெ...








31 Oct 2015

காகிதம் !

காகிதம் !


உலர்ந்தே கிடக்கிறது
அந்த காகிதத்துண்டு...!

எடுத்து எழுதுவதற்கு
எத்தனை முறை எத்தனித்தாலும்
ஏதோ ஒன்று தடுக்கிறது...!

இதயமும்,
இந்த பேனாவும்
இன்னமும் மூடியே கிடக்கிறது...!

என் மனம் பிரசவிக்கும்
எண்ணங்களுக்கும் எழுத்துகளுக்கும்
பேனா நுனியை அடைவதற்குள்ளேயே
ஆயுள் முடிகிறது...!

எழுதியாகவேண்டுமென்ற
எண்ணத்துடன்
புழுதி படிந்து கிடந்த - அந்த
வெற்றுக் காகிதத்தை - இன்று
கையிலெடுத்தேன்...!

மனதையும் பேனாவையும்
ஒருசேர திறந்தேன்...!

எதையெதையோ நினைத்து
எதையெதையோ கிறுக்க நினைத்தேன்...!

காகிதத்தை கண்களும் - என்
கண்களை காகிதமும்
முறைந்துப்பார்த்து கொண்டிருந்தன...!

ஒரே அமைதி...!

நீண்ட நேர நிசப்தத்திற்குபின்
காகித்தத்தின்மேல்
கொட்டித்தீர்த்துவிட்டன என் கண்கள்...!
கண்ணீர்துளிகளை...

இன்றும் என் கவிதைகள்
கருவறையிலே கல்லறையாகிவிட்டன...!

இன்றும் இங்கு
மாற்றமேதுமில்லை...!
ஈரமாய் போன
அந்த காகிதத்துண்டை தவிர...

----அனீஷ் ஜெ...

30 Sept 2015

தனிமை !

தனிமை !


இமை மூடி,
இதழ் சேர்த்து,
கன்னம் உரசி,
கைகள் கோர்த்து
காதல் செய்தோம் நாம் அன்று...!

இதயம் மூடி,
இரவுகள் சேர்த்து,
கவலைகள் உரசி,
கண்ணீர் கோர்த்து
தனிமை நெய்கிறேன் நான் இன்று...!

----அனீஷெ ஜெ...

31 Aug 2015

மரணப்புழுக்கள் !

மரணப்புழுக்கள் !


மரணப்புழுக்கள்
மனமெங்கும் நெளிகிறது !

வீசியெறிந்த வார்த்தைகள் - மனதை
விறகாக்கி உடைக்கிறது !

கரும்சோகங்கள்
கழுத்துக்குள் அடைக்குறது !

வலிகளெல்லாம் - இதயத்தின்
வாசற்படியிலே காத்திருக்கிறது !

பகலுக்கும் இரவுக்கும்
இரவுக்கும் பகலுக்குமான
இடைவெளிகள் மட்டுமே நீள்கிறது !

வாழ்ந்து முடிக்கையில்
வலிகளை மட்டுமே 

மிச்சம் வைத்து செல்கிறது வாழ்க்கை...!
வலிகளை மட்டுமே...

----அனீஷ் ஜெ...





31 Jul 2015

இயற்கை மாற்றம் !

இயற்கை மாற்றம் !


புயலென மூச்சு...!
மழையென வியர்வை...!!
பூகம்ப நடுக்கம்...!
எரிமலை வெப்பம்...!!

என்
ஒரு விரல் வருடலில்,
உனக்குள்
இத்தனை
இயற்கை மாற்றங்கள்...

----அனீஷ் ஜெ...

30 Jun 2015

துரோகம் !

துரோகம் !


ஆரம்பம் நான்
அடையாளம் காணவில்லை !

மெதுமெதுவாய் வளர்ந்தபோதும்
மனம் உணரவில்லை...!

மாற்றங்களும் இல்லை...!
நேற்றுவரை வலி தரவில்லை...!!

இன்றோ என்னை
ஒன்றுமில்லாமல் செய்து
மண்ணோடு சாய்த்துவிட்டது...!

உண்மைதான்...
புற்றுநோயை விட
பத்துமடங்கு கொடியதுதான்...!
இந்த துரோகம்...

----அனீஷ் ஜெ...


31 May 2015

17 Apr 2015

சரியான விடை !

சரியான விடை !


முறைத்துப் பார்த்தபடி - எனக்கு
விடைதெரியாத
ஏதேதோ கேள்விகள் கேட்கிறாள் அவள்...!

இறுக்கி அணைத்தபடி
இரு கைகளால் - அவள்
இடைதேடினேன் நான்...!

இமை மூடியபடி முனகினாள்...!
இதுதான் சரியான விடையென்று...

----அனீஷ் ஜெ...





10 Apr 2015

கவிதை எழுதுவது எப்படி?

கவிதை எழுதுவது எப்படி?


கவிதை எழுத தெரியாதென்கிறாய்...!
அப்படியென்றால்
உன் கன்னத்தில் விழும் குழிகளுக்கு
என்ன பெயர்...?

***********************************************************************************


கவிதை எழுதுவது எப்படியெனக்கேட்டு
கவலைகொள்கிறாய் நீ...!

நீ பேசும் வார்த்தைகளை
ஒரு காகிதத்தில் சேகரித்துவை...!

கவிதை எழுத தெரியாதென்கிற - உன்
கவலையும் நீங்கட்டும்...!

----அனீஷ் ஜெ...