![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQPeHROjdNuW1g0o6Tlb6iS_Q5DfA9UXdaDeCGMgeLRJbIuRzAXqGKWcXV5SeuxhVrQOWZjwYLKoPx27SSPLOcCVE4y8dj-7kZYfLNZJMvrm5kocNwF_xnLftkw8OCkAYn7EwG-Wgesftl/s1600/ann.jpg)
சிறு துளியாய்
வெறும் தரையில் விழுந்தது...!
முதல் மழைத்துளி...
சிறுதுளிகளெல்லாம்
சங்கீதாமாய் பொழிய
தூறல் மழை சாரலானது...!
அடைமழை அழகாய் விழ
குடை பிடிக்கவும் பிடிக்கவில்லை...!
நிலவின் குளிரும்
நீல வானின் அழகும் போல - என்
மேலே விழுந்தது மழை...!
சுகமாய் நனந்தேன் நான்...!
மேக கூட்டங்கள் - அதன்
தேகம் கரையும் வரை
கொட்டித்தீர்த்தது மழை...!
பாதத்தை தொட்டிருந்த மழையோ
என்னில் பாதியை
எட்டியிருந்தது இப்போது...!
கால்கள் இரண்டும்
கடும் வெள்ளத்தில் சிக்கிக்கொள்ள
நீந்து முயற்சிகளில்
மீண்டும் மீண்டும் தோற்கிறேன் நான்...!
மழையோ நின்றபாடில்லை...!
முகம் நோக்கி
முன்னேறும் வெள்ளம் - என்னை
மூழ்கடிக்கும் முன்
மூச்சை இழக்காமல் தப்பிக்கவேண்டும்...!
முயற்சிகள் ஏனோ பலனளிக்கவில்லை...!
கடைசியில்
தோற்றே போகிறேன்...!
மூழ்கியே மூச்சை இழ்ந்துவிட்டேன் நான்...!
சில மழைகளுக்கு
மனசாட்சியே இருப்பதில்லை...!
சுகமாய் விழ ஆரம்பித்து - பின்பு
சுக்குநூறாக்கி,
கடைசியில்
கண்மூடித்தனாய் கொன்றே விடுகிறது...!
சில காதல்களை போல...
----அனீஷ் ஜெ...
![](https://1.bp.blogspot.com/-mllm8XA2qPc/YHiHc3V7npI/AAAAAAAACw0/EI1FO9_QgCszC5dpB07dtlDTw84rmWH4gCLcBGAsYHQ/s0/glsbanner11.gif)
0 விமர்சனங்கள்: