29 Dec 2010
26 Dec 2010
மனிதனாக பிறந்த இறைமகனே...!
பூமியில் அன்பு
பூத்து குலுங்கவே
பூவாக மலர்ந்தவனே...!
பாலைவன இதயங்களும்
பசுமையாய் மாறிட
பாவிகளுக்காய் வந்தவனே...!
கல்வாரி மலையிலே
காயங்கள் பெறவே
கருணையோடு பிறந்தவனே...!
மனங்கள் எல்லாம்
மகிழ்ச்சியில் நிறைந்திட
மனிதனாய் உதித்தவனே...!
அகிலத்தார் நெஞ்சங்கள்
அமைதியில் திளைத்திட
அன்பாக முளைத்தவனே...!
மாட்டுத்தொழுவத்திலும் - இன்று
மனித மனங்களிலும்
மனிதனாக பிறந்த இறைமகனே...!
-----அனீஷ்...
பூத்து குலுங்கவே
பூவாக மலர்ந்தவனே...!
பாலைவன இதயங்களும்
பசுமையாய் மாறிட
பாவிகளுக்காய் வந்தவனே...!
கல்வாரி மலையிலே
காயங்கள் பெறவே
கருணையோடு பிறந்தவனே...!
மனங்கள் எல்லாம்
மகிழ்ச்சியில் நிறைந்திட
மனிதனாய் உதித்தவனே...!
அகிலத்தார் நெஞ்சங்கள்
அமைதியில் திளைத்திட
அன்பாக முளைத்தவனே...!
மாட்டுத்தொழுவத்திலும் - இன்று
மனித மனங்களிலும்
மனிதனாக பிறந்த இறைமகனே...!
-----அனீஷ்...
17 Dec 2010
ஒரு துளி கண்ணீர்
சுவாசமாய் என் உயிருக்குள்,
சுடராய் என் இதயத்தில்
எரிந்தவள் நீ...!
என் கவிதைகளுக்கும்,
உன் மவுனங்களில்
வார்த்தைகளை தந்தவள் நீ...!
இன்று ஏனடி நீ
என் இதயத்தை
சில்லாய் நொறுக்கிப்போகிறாய்...?
உயிருக்குள்
உனை வைத்தேன்...!
நீ ஏனடி - என் உயிரை
முள்ளாய் தைக்கிறாய்...?
என் கண்ணீரை - நீ
துடைப்பாய் என்றிருந்தேன்...!
நீ ஏனடி
என் கண்ணீர் மழை கண்டு
குடை பிடிக்கிறாய்...!!
என் வலிகளுக்கு கூட
நீதான் அழுதிருக்கிறாய்...!
இன்று நானோ அழுகிறேன்...!!
உன் இதயம் வலிக்கவில்லையா...?
என் உணர்வுகளும்,
நான் கொண்ட காதலும்
நீ விளையாடும்
பொம்மையானது ஏனோ...?
உன் காதல் - வெறும்
பொய் தானோ...?
காதல் பாஷை
கற்றுத் தந்தாய்...!
காற்றின் ஓசையிலும்
காதல் இசை மீட்டிச்சென்றாய்...!!
அவை கூட வெறும்
பொய் வேஷம் தானோ...?
நான் தூங்க
உன் இமை கேட்டேன்...!
நான் வாழ - உன்
இதயம் கேட்டேன்...!!
மறுத்திருந்தால் கூட
மன்னித்திருப்பேன்...!!!
ஆனால் நீயோ
தந்துவிட்டு ஏனடி
திருப்பிக்கேட்கிறாய்...?
பாதி பயணத்தில் ஏனடி
திரும்பிப்போகிறாய்...?
இப்போதோ உன்னை
மன்னிக்க மறுக்கிறதுதடி - என்
மனது...!
உடைப்பதுதான்
உனக்கு பிடிக்குமா...?
என் இதயமும்,
உன் சத்தியங்களும்
சில்லாய் சிதறி கிடக்கின்றன...!
பொய் காரணங்கள்
போதுமடி எனக்கு...!
மனமிருந்தால் இங்கு
மாற்கங்களும் உண்டு...!!
என் காதலை தவிர
என்னிடம் எதுவுமில்லை...!
உன்னிடம் தர...
இதனால்தான்
இப்போது விலகி செல்கிறாயா...?
இரக்கமில்லாதவளா நீ...?
நீ என்னை
ஏமாற்றவில்லை...!
நான் தான் உன்னிடம்
ஏமாந்து போனேன்...!!
உன்
வார்த்தை காதலால்
வலிபட்டு நிற்கிறேன்...!
வார்த்தையில் இல்லையடி காதல்...!
காதலுக்காய்
வாழ்ந்துகாட்டுவதில்தான்
வாழ்கிறது உண்மை காதல்...!!
தவறுகளை கூட
மன்னித்துவிடலாம்...!
ஆனால் பாவங்கள்
தண்டிக்கப்பட வேண்டும்...!!
என்றாவது ஒருநாள்
என் நினைவுகள்
உன் இதயத்தில் வரும்போது
உன் கண்கள் சிந்தும்
அந்த ஒருதுளி
கண்ணீர் துளியும்
உனக்கு தண்டனையே...
-----அனீஷ்...
சுடராய் என் இதயத்தில்
எரிந்தவள் நீ...!
என் கவிதைகளுக்கும்,
உன் மவுனங்களில்
வார்த்தைகளை தந்தவள் நீ...!
இன்று ஏனடி நீ
என் இதயத்தை
சில்லாய் நொறுக்கிப்போகிறாய்...?
உயிருக்குள்
உனை வைத்தேன்...!
நீ ஏனடி - என் உயிரை
முள்ளாய் தைக்கிறாய்...?
என் கண்ணீரை - நீ
துடைப்பாய் என்றிருந்தேன்...!
நீ ஏனடி
என் கண்ணீர் மழை கண்டு
குடை பிடிக்கிறாய்...!!
என் வலிகளுக்கு கூட
நீதான் அழுதிருக்கிறாய்...!
இன்று நானோ அழுகிறேன்...!!
உன் இதயம் வலிக்கவில்லையா...?
என் உணர்வுகளும்,
நான் கொண்ட காதலும்
நீ விளையாடும்
பொம்மையானது ஏனோ...?
உன் காதல் - வெறும்
பொய் தானோ...?
காதல் பாஷை
கற்றுத் தந்தாய்...!
காற்றின் ஓசையிலும்
காதல் இசை மீட்டிச்சென்றாய்...!!
அவை கூட வெறும்
பொய் வேஷம் தானோ...?
நான் தூங்க
உன் இமை கேட்டேன்...!
நான் வாழ - உன்
இதயம் கேட்டேன்...!!
மறுத்திருந்தால் கூட
மன்னித்திருப்பேன்...!!!
ஆனால் நீயோ
தந்துவிட்டு ஏனடி
திருப்பிக்கேட்கிறாய்...?
பாதி பயணத்தில் ஏனடி
திரும்பிப்போகிறாய்...?
இப்போதோ உன்னை
மன்னிக்க மறுக்கிறதுதடி - என்
மனது...!
உடைப்பதுதான்
உனக்கு பிடிக்குமா...?
என் இதயமும்,
உன் சத்தியங்களும்
சில்லாய் சிதறி கிடக்கின்றன...!
பொய் காரணங்கள்
போதுமடி எனக்கு...!
மனமிருந்தால் இங்கு
மாற்கங்களும் உண்டு...!!
என் காதலை தவிர
என்னிடம் எதுவுமில்லை...!
உன்னிடம் தர...
இதனால்தான்
இப்போது விலகி செல்கிறாயா...?
இரக்கமில்லாதவளா நீ...?
நீ என்னை
ஏமாற்றவில்லை...!
நான் தான் உன்னிடம்
ஏமாந்து போனேன்...!!
உன்
வார்த்தை காதலால்
வலிபட்டு நிற்கிறேன்...!
வார்த்தையில் இல்லையடி காதல்...!
காதலுக்காய்
வாழ்ந்துகாட்டுவதில்தான்
வாழ்கிறது உண்மை காதல்...!!
தவறுகளை கூட
மன்னித்துவிடலாம்...!
ஆனால் பாவங்கள்
தண்டிக்கப்பட வேண்டும்...!!
என்றாவது ஒருநாள்
என் நினைவுகள்
உன் இதயத்தில் வரும்போது
உன் கண்கள் சிந்தும்
அந்த ஒருதுளி
கண்ணீர் துளியும்
உனக்கு தண்டனையே...
-----அனீஷ்...
9 Dec 2010
செல்லமாய் மெல்ல நீ சிரிப்பதேன்?
இதழ்கள் இல்லாமல் இசைக்கிறாய்...!
நீ இதயத்தின் ஓசையா...?
காதோடு தினம் பேசினாய்...!!
நீ அறிவியலின் பாஷையா...??
கைக்குள்ளே அடங்கினாய்...!
நீ ஹைக்கூ கவிதையா...?
கண்களுக்கு அதிசயமானாய்...!!
நீ காலம் சொல்லும் கதையா...??
விரல் நுனியில் விழிக்கிறாய்...!
நீ விஞ்ஞான வித்தையா...?
குட்டி கடிதம் சுமக்கிறாய்...!!
நீ மின்சார வார்த்தையா...??
உலகத்தை உன் கையில் ஏந்தினாய்...!
நீ ஹெர்குலஸ் சிலையா...?
உலகத்தை நீயே ஆள்கிறாய்...!!
நீ கடவுள் அறியாத கலையா...??
காற்றோடு குரலை கலக்கிறாய்...!
காசு தீர்ந்தால் கசக்கிறாய்...!!
ரீ-சார்ஜ் செய்தால் மீண்டும் பிறக்கிறாய்...!
ரிங்டோனாய் காற்றில் பறக்கிறாய்...!
செல்லமாய் மெல்ல நீ சிரிப்பதேன்
செல்போனே...
-----அனீஷ்...
5 Dec 2010
இதயம் தந்தால்
அன்பே! நீ
பார்த்து நின்றால்
சூரியன் கூட
எரிவதை மறக்கும்...!!
சிலையே! நீ
சிரித்துச் சென்றால்
மடிந்த மலர்களும்
மறுபடி உயிர்க்கும்...!!
பெண்ணே! நீ
பேசிச் சென்றால்
சங்கீதம் உன்னிடம்
சரிகம கற்க்கும்...!!
உயிரே! நீ
உன் பெயரை தந்தால்
ஒற்றை சொல்லில்
ஒரு கவிதை கிடைக்கும்...!!
கண்ணே! உன்
கால்கள் பட்டால்
கடற்கரை மணலும்
கல்வெட்டாகும்...!
என் இதயமே! நீ
உன் இதயம் தந்தால்
பூமியில் எனக்காய்
புதிய சொர்க்கம் பிறக்கும்...!!
----அனீஷ்...
28 Nov 2010
அம்மா...
உன் மூச்சு காற்றே
என் முதல் மூச்சானது...!
அம்மா என்று நான் அழைத்ததே
எனக்கு முதல் பேச்சாசானது...!!
நீ ஊட்டிய சோறே
எனக்கு அமுதமானது...!
நீ காட்டிய நிலவே
எனக்கு முதல் பொம்மையானது...!!
நான் சிரித்தால்
நீ சிரிக்கின்றாய்...!
நான் அழுதால்
நீயும் அழுகின்றாய்...!!
பிம்பமே இல்லாத
பிரமிப்பான கண்ணாடி நீ...
உயிர் தந்தவள் நீ...!
உடன் வருபவள் நீ...!!
கைதொடும் தூரத்திலிருக்கும்
கடவுளும் நீ...!!!
உயரம் கொண்ட
உன் அன்புக்கு கீழே,
சிகரங்கள் கூட
சிறியதாகிப் போகும்...!
உன் மடி மீது
கொஞ்சம் தலைசாய்த்தால்
வலிகள் கூட
சுகமாக மாறும்...!
இனியும் நான்
ஆயிரம் ஜென்மம் கண்டாலும்
தாயே - நான்
உன் கருவறையிலையே
உயிர் கொள்ள வேண்டும்...
-----அனீஷ்...
24 Nov 2010
உனக்குள் கரைகிறேன் நான்
என் விரல் தீண்டி
உன் விரதம் கலைக்கவா...?
என் எல்லையை தாண்டி
உன் வெட்கம் உடைக்கவா...??
உன் கூந்தலிலே - நான்
கூரை நெய்யவா...?
விடியும்வரை அதில் நான்
குடியிருக்கவா...??
உன் உதட்டோரம்
நான் பசி தொலைக்கவா...?
உன் உயிருக்குள்
நான் கசிந்து கரையவா...??
உன் நெஞ்சுக்கு
நான் மஞ்சமாகவா...?
உச்சம் தொடும்வரை - நான்
அதில் தஞ்சம் கொள்ளவா...?
உன் இடையோரம்
நான் விடை காணவா...?
தடையேதும் இல்லாமல் - நான்
உனை மேயவா...??
மேகமாய் உனக்குள் நான்
மோகம் வளர்க்கவா...?
முத்த மழையில் உன்னை நான்
மொத்தம் நனைக்கவா...??
----அனீஷ் ஜெ...
21 Nov 2010
ஹைக்கூ - உன் காதல்
என்னை கொல்வதற்கென்றே
பிறந்தவள் நீ...!
பக்கத்தில் இருக்கும்போது
பார்வைகளால்...
தூரத்தில் இருக்கும்போது
நினைவுகளால்...
***********************************************************************************
நல்ல மழை...!
நாம் இருவரும்
ஒற்றை குடையில்...!!
இருந்தும் நான்
முழுதாய் நனைகிறேன்...!!!
உன் காதலில்...
நாம் இருவரும்
ஒற்றை குடையில்...!!
இருந்தும் நான்
முழுதாய் நனைகிறேன்...!!!
உன் காதலில்...
18 Nov 2010
தண்டனைகள்
வழியெங்கும் என்னை
வரவேற்க்கின்றன...!
பள்ளங்களை மட்டுமே கொண்ட
பரிதாபமான பாதைகள்...
வரவேற்க்கின்றன...!
பள்ளங்களை மட்டுமே கொண்ட
பரிதாபமான பாதைகள்...
சில கணங்களில் என்னை
சின்னாபின்னாமாக்குகின்றன...!
விடைகளே இல்லாத கேள்விகளால் - நான்
விழிபிதுங்கி நிற்க்கும் தருணங்கள்...!!
என்னை புரிந்துகொள்ளாமல்
ஏளனம் செய்கின்றன...!
உணர்வுகள் இல்லாத
ஊனமான சில உள்ளங்கள்...
இரக்கமற்ற இதயங்கள்...!
அர்த்தமற்ற அன்பு...!!
தவறான புரிதல்கள்...!
நிரந்தர பிரிவுகள்...!
இவைகளால்
இன்னொருமுறை உடைகிறேன் நான்...
ஏமற்றங்கள்
என்னை ஒன்றும் செய்யாது...!
தண்டனைகள் என்னை
தகர்த்தும்விடாது...!!
அடிக்கடி நீ என்னை
ஆறாத வலிகளை
அடிநெஞ்சில் சுமக்கச்சொல்கிறாய்...!
தவறுகள் செய்யாமலே
தண்டனைகள் எனக்கு...
நீ தண்டிப்பதாய் நினைத்து,
நிர்ப்பந்தமாய் என்னை நீ
சிலுவையில் அறைவது
நியாயமாயிருக்கலாம் உனக்கு...!
அதிலொன்றும்
ஆச்சரியமில்லை...!!
ஆனால்
ஆணிகள் ஏன் என் இதயத்தில்...
சின்னாபின்னாமாக்குகின்றன...!
விடைகளே இல்லாத கேள்விகளால் - நான்
விழிபிதுங்கி நிற்க்கும் தருணங்கள்...!!
என்னை புரிந்துகொள்ளாமல்
ஏளனம் செய்கின்றன...!
உணர்வுகள் இல்லாத
ஊனமான சில உள்ளங்கள்...
இரக்கமற்ற இதயங்கள்...!
அர்த்தமற்ற அன்பு...!!
தவறான புரிதல்கள்...!
நிரந்தர பிரிவுகள்...!
இவைகளால்
இன்னொருமுறை உடைகிறேன் நான்...
ஏமற்றங்கள்
என்னை ஒன்றும் செய்யாது...!
தண்டனைகள் என்னை
தகர்த்தும்விடாது...!!
அடிக்கடி நீ என்னை
ஆறாத வலிகளை
அடிநெஞ்சில் சுமக்கச்சொல்கிறாய்...!
தவறுகள் செய்யாமலே
தண்டனைகள் எனக்கு...
நீ தண்டிப்பதாய் நினைத்து,
நிர்ப்பந்தமாய் என்னை நீ
சிலுவையில் அறைவது
நியாயமாயிருக்கலாம் உனக்கு...!
அதிலொன்றும்
ஆச்சரியமில்லை...!!
ஆனால்
ஆணிகள் ஏன் என் இதயத்தில்...
-----அனீஷ்...
13 Nov 2010
நீ என்பவள்...

அமாவாசை வானத்தின்
அடர்ந்த கருமேகம் உன் கூந்தலானது...!
ஆயிரம் கதைகள் சொல்லி
அது உன் இடை வரை ஊஞ்சலாடுது...!!
நீரிலே துள்ளும் - இரு
நீல மீன்கள் உன் கண்களானது...!
அது அசையும் ஓரப்பார்வையில்
என் நெஞ்சம் விண்ணில் பாயுது...!!
கட்டி இழுக்கும் - இரு
கறுப்பு கோடுகள் உன் புருவமானது...!
அது வளைந்திருப்பதால்
வானவில்லுக்கும் அதுவே உருவமானது...!!
பட்டிலே செய்த - ரோஜா
பூ மொட்டு இரண்டு உன் கன்னமானது...!
அதன்மேல் விழும் இரு குழியே - நான்
நீர் அருந்தும் கிண்னமானது...!!
தேனிக்கள் காணாத
தேன்கூடு ஒன்று உன் இதழானது...!
அதை காணும்போதெல்லாம் - என்
உதடுகள் ஏனோ பசிகொள்ளுது...!!
உலகின் அத்தனை மலர்களும்
ஒன்றாய் சேர்ந்து உன் கைவிரலானது...!
அது என்னை தொட்டுத்தொட்டு
பேசும்போது என் மனம் பறிபோகுது...!!
உன் பாதங்கள் வரையும்
சுவடுகள் கூட சுவாசம் கொள்ளுது...!
உனக்குள் என் இதயம்
இங்கே தொலைந்துபோகுது...!!
------அனீஷ்...

