13 Nov 2010

நீ என்பவள்...


அமாவாசை வானத்தின்
அடர்ந்த கருமேகம் உன் கூந்தலானது...!
ஆயிரம் கதைகள் சொல்லி
அது உன் இடை வரை ஊஞ்சலாடுது...!!

நீரிலே துள்ளும் - இரு
நீல மீன்கள் உன் கண்களானது...!
அது அசையும் ஓரப்பார்வையில்
என் நெஞ்சம் விண்ணில் பாயுது...!!

கட்டி இழுக்கும் - இரு
கறுப்பு கோடுகள் உன் புருவமானது...!
அது வளைந்திருப்பதால்
வானவில்லுக்கும் அதுவே உருவமானது...!!

பட்டிலே செய்த - ரோஜா
பூ மொட்டு இரண்டு உன் கன்னமானது...!
அதன்மேல் விழும் இரு குழியே - நான்
நீர் அருந்தும் கிண்னமானது...!!

தேனிக்கள் காணாத
தேன்கூடு ஒன்று உன் இதழானது...!
அதை காணும்போதெல்லாம் - என்
உதடுகள் ஏனோ பசிகொள்ளுது...!!

உலகின் அத்தனை மலர்களும்
ஒன்றாய் சேர்ந்து உன் கைவிரலானது...!
அது என்னை தொட்டுத்தொட்டு
பேசும்போது என் மனம் பறிபோகுது...!!

உன் பாதங்கள் வரையும்
சுவடுகள் கூட சுவாசம் கொள்ளுது...!
உனக்குள் என் இதயம்
இங்கே தொலைந்துபோகுது...!!

------அனீஷ்...
SHARE THIS

2 comments: