21 Oct 2010

கவிதைகள் மரித்துவிடும்...


சுவாசமில்லாமல் கிடந்த - என்
கவிதைகளின்
மூச்சுப்பைக்குள் - உன்
காதலால்
காற்றை நிரப்பியவள் நீ...!

உடைந்துகிடந்த - என்
பேனா முனைகளுக்கு
உன் வார்த்தைகளால்
உயிர் கொடுத்தவள் நீ...!

எப்போதும் என்னை நீ
விட்டுவிலகி போய்விடாதே...!

என்னைவிட்டு - நீ
தூரம் போனால்
மறுபடியும் மரித்துபோவது
என் கவிதைகள் மட்டுமல்ல...!
என் உயிரும் தான்...
இன்னொருமுறை உடைந்து சிதறுவது
என் பேனாமுனை மட்டுமல்ல...!!
என் இதயமும் தான்...

-----அனீஷ்...
SHARE THIS

4 comments: