19 Mar 2011

ஒரே அர்த்தம்!


அது ஒரு
அழகான இரவு...!

இருட்டை
பவுர்ணமி நிலா
விழுங்கிக்கொண்டிருந்தது...!

என் அருகில் அமர்ந்து
ஏதேதோ கதைகள்
பேசிக்கொண்டிருந்தாய் நீ...!

திடீரென
நான் உன்னிடம் கேட்டேன்...!
என்னை உனக்கு
எவ்வளவு பிடிக்கும் என்று...!!

யோசித்துக்கொண்டே பதில் சொன்னாய்...!
கடலின் ஆழம் போல்
என் காதல் ஆழமானது என்று....

நான் கேட்டேன்...!
கடலின் அழத்திற்கு
எல்லை உண்டல்லவா?
உன் காதலும்
அது போலவா என்று...

இல்லை இல்லை என்று
படபடவென மறுத்தாய் நீ...!
அப்போது
உன் முகத்தில் பிறந்த
சோக சுவடுகளையும்
நான் கவனிக்க தவறவில்லை...

எல்லையில்லாத உன் காதலை
கடலின் ஆழத்திற்கு
அளவிட முயற்சித்து
தோற்றுப்போனாய் நீ...!

புன்னைகைத்தேன் நான்...!

நான் கேட்ட கேள்வியை
இப்போது என்னிடமே
திருப்பிக்கேட்டாய் நீ...!

தூரத்து நிலவை காண்பித்தேன் நான்...!

புரியாமல் முழித்தாய் நீ...!

அந்த நிலாப்பொட்டை
ஒட்டி வைத்திருக்கும்,
வானமெனும் நெற்றியைபோல்
எல்லையில்லாதது
என் காதலென்றேன் நான்...!

உன்
கண்ணில் ஒரு துளி
கண்ணீர்துளி எட்டிப்பார்க்க - என்னை
கட்டியணைத்தாய் நீ...

அந்த கண்ணீர்துளிக்கும்,
அந்த அணைப்பிற்க்கும்
ஒரே ஒரு அர்த்தம்தான்
இருக்க முடியும்...!
கடலின் ஆழத்தையும்,
வானின் நீளத்தையும் விட
பெரியது...!
உன் காதல்...

----அனீஷ் ஜெ...
SHARE THIS

10 comments:

  1. மிகவும் அருமை.

    ReplyDelete
  2. @athira: மிக்க நன்றி

    ReplyDelete
  3. kadhal ai alaka mudiyadu

    ReplyDelete
  4. @anishka nathan: வாங்க வாங்க... :) ரொம்ப நாளுக்கு அப்புறம் வந்திருக்கீங்க... ரொம்ப நன்றி :)

    ReplyDelete
  5. Superooo Super.... Keep posting....

    ReplyDelete
  6. சபாஷ் கற்பனையால் விளையாடியிருக்கீங்க

    எனக்கும் கண்ணில் நீர்துளிகள் துளிவிட்டது

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. Migavum Arumai...
    Kadhaluku alavu illaini Azhaga sollirukeenga...!
    Kalakureenga...!
    :C :C :C

    ReplyDelete
  8. @Raja Mohamed : வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றி...! :)

    ReplyDelete
  9. @அழகி : வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றி...! :)

    ReplyDelete
  10. @Kaavya : வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றி...! :)

    ReplyDelete