5 Jan 2012

குட்டி கவிதைகள் - நினைவுகள் !


எத்தனையோமுறை
கண்ணீரால் கழுவியும்,
இன்னும் நீங்கவில்லை...!
என் இதயத்தில் ஒட்டியிருக்கும்
உன் நினைவுகள்...

***********************************************************************************


நீ இல்லாமல்
பாலைவனமாகிப்போனது
என் வாழ்க்கை மட்டுமல்ல...!
உன் இதழ்களின் ஈரம்படாத
என் இரு கன்னங்களும்தான்...
 

***********************************************************************************


உன் நினைவுகளை
சுமந்துகொண்டு,
தினம் தினம்
வலிகளை மட்டுமே 

பிரசவிக்கிறது...!
என் இதயம்...

----அனீஷ் ஜெ...
SHARE THIS

22 comments:

  1. good poem but very painful i too got pain while reading

    ReplyDelete
  2. ஒவ்வொன்றும் ஒரு வித ஈர்ப்பை உண்டாக்குகிறது தல ...
    மூன்றும் மனசில் ஒட்டிக்கொள்ளும் அழகிய படைப்புகள் ...
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. super anish.. alagana varigal.. arumaiyana varthaigal.. ama yen ippadi kadhal tholviya ungaluku.. athanal thano valigalil unmai iruku.. next pick up panna parunga.. na sonnathu livela settle agura valiya parunganu ..

    ReplyDelete
  4. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... கவிதையில கலக்கிட்டீங்க கவிக்கா.... குறை பிடிச்சிடலாம் என.... மேல கீழ தேடியும் ஒண்ணும் கிடைக்கல்ல இம்முறை:((... அடுத்தமுறை மாட்டாமலோ போகும்? நான் குறையைச் சொன்னேன்..:R:R:R

    ReplyDelete
  5. haie ellame superaaa irukku ...
    very good

    ReplyDelete
  6. @anishka nathan: ஹ்ம்ம்ம் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

    ReplyDelete
  7. @அரசன்: வாங்க தல...

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

    ReplyDelete
  8. @kilora: இன்னமா அட்வைஸ் பண்றீங்க நீங்க... :U

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

    ReplyDelete
  9. @athira: குறை இல்லையா..? :)

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

    ReplyDelete
  10. @கலை: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

    ReplyDelete
  11. நான் குறை இல்லை எனச் சொன்னது கவிதைக்கு மட்டும்தான்.. கவிக்காவுக்கல்ல...:A:A:A:A:A:A:A:A

    ReplyDelete
  12. @athira: ”எனக்கு என்னங்க குறை?” இப்படி கேட்டா தமிழ்சினிமா ஹீரோ பேசுற வசனம் மாதிரி ஆயிடும்...! So வாணாம்... விட்டுட்டேன்...:T:T

    நன்றி...!!:)

    ReplyDelete
  13. @ஜெய்லானி: வாங்க பாஸ்...! :)

    வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றி !!!

    ReplyDelete
  14. வலிகளை வரிகளாக ,
    சொல்லிடீங்க!
    அருமை!

    ReplyDelete
  15. @Seeni: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா...!

    ReplyDelete
  16. பிரியாAugust 01, 2012 11:57 am

    மிகவும் சிறப்பான கவிதைகள்

    ReplyDelete
  17. @பிரியா: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி... :)

    ReplyDelete
  18. நினைவுகளில் இனிக்கும் கவிதைகள்.. பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.. வாழ்த்துகல்..

    ReplyDelete
  19. அன்பின் அனீஷ் ஜே - குறுங்கவிதைகள் அருமை - கண்னீரால் கழுவினாலும் நினைவுகள் நீங்குவதில்லை. இதழ்களின் ஈரம் படாத கன்னங்கள் வரண்ட பாலைவனமாகி விட்டது. வலிகளை மட்டுமே பிரசவிக்கும் இதயம் - காதல் தோல்வியால் விளைந்த கவிதைகள். நன்று நன்று - நல்வாழ்த்துகள் அனீஷ் ஜே

    ReplyDelete
  20. @இராஜராஜேஸ்வரி: வாங்க...

    முதல் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)

    ReplyDelete
  21. @cheena (சீனா): வாங்க நண்பரே...!

    உங்கள் முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி...! :)

    ReplyDelete