27 Aug 2012

திருக்குறள் !


ஏழு வார்த்தை வண்ணங்களால்
வானவில் எழுதிய வரிகள் நீ...!

முப்பாலில் மூன்றாம்பால்
உன் தேகமெங்கும் தஞ்சமிருக்க,
முதலிரண்டு பாலும்
உன் நெஞ்சோடு மிச்சமிருக்கிறது...!

அகிலத்தின் அத்தனை
அழகான அம்சங்களும்
உனக்குள் அடங்கிப்போக,
அதனுடன் சேர்ந்து நானும்...

வாசிக்கவும் தெரியவில்லை...!
நேசித்தும் உன்னை புரியவில்லை...!

பெண்ணே...!
ஐந்தரை அடியில்
பிரம்மன் எழுதிய
அழகான திருக்குறள் தான் நீ...

----அனீஷ் ஜெ...




SHARE THIS

0 விமர்சனங்கள்: