
விழுந்து கிடக்கிறேன் நான்...!
எதையாவது பிடித்து
எழுந்து நிற்க முயற்சிக்கும்போதெல்லாம்,
கைகளுக்குள் அகப்படுவது
குத்தி கிழிக்கும் முள் சுவரே...!
வழியும் குருதியை
விழிநீரால் துடைத்துவிட்டு
பெரும்பாறைகள் கொண்ட
வெறும்தரையில் நடக்கிறேன்...!
கல்களின் கூர்மைகளில்,
தோல் தொலைத்த
கால்கள் இரண்டும்
மெல்லமாய் அழுகின்றன...!
இடையிடையே
இடி மின்னலுக்கும்
கடும் மழைக்கும் பஞ்சமில்லை...!
இலைகள் நிறைந்த
மரமொன்று
தூரத்தில் தெரிகிறது...!
இளைப்பாறும் ஆசையுடன்
வேகமாய் நான் நடக்கவே,
பெரும்புயலொன்று அதை - என்
கண்முன்னே சாய்க்கிறது...!
கதறி அழுதுகொண்டே
தரையில் சாய்கிறேன் நான்...!
நான் மறுபடியும் எழுந்து
நடந்தாக வேண்டும்...!
இந்த பயணத்தைபோலவே
கொடுமையாக நகர்கிறது...!
வாழ்க்கையும்....
----அனீஷ் ஜெ...
Send Your Comments on Whatsapp. Click Here
Update version is good and many kavidhai send my mail.
ReplyDeleteNalla irukunga inum feelinga venum
ReplyDeleteVery nice bro
ReplyDeleteVery very nice
ReplyDeleteNice
ReplyDeleteA tear is made of1% water and 99% of feelings....
ReplyDelete