![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgORHnk1kS-WRj-SRItlYFC7Pja5qJRg__s8_tNYSQQfSzHrbmWtN987FkGM3DZk5nNAcAs4PFt58AkdO_SNSA-wZ4PRWUjLhYYaYsQc5vUWhclbsdmfSLesAPg_oZ1a10lohsU6MmVK8Yj/s1600/ann.png)
இரவு மெல்ல
இமை திறக்கிறது...!
பாய் விரித்த
பாலைவன தேசத்தில்
பயணமொன்று செல்கிறோம் நாம்...!
மார்பு பள்ளத்தாக்கில் - நான்
தடுக்கி விழும்போதெல்லாம்
இடையொன்றை
இறுக்கிபிடித்தே நகருகின்றேன்...!
உதடுகளை உரசி
அக்கினி வெளிச்சத்தை
உருவாக்கும் முயற்சியில்
தோற்றுப்போகிறோம் நாம்...!
பெருமூச்சில்
பெரும்சூடு வீச,
குருதிக்குள்
குளிர்காற்று பாய்கிறது...!
மேடு பள்ளங்கள்,
சுவாச வெப்பங்கள்,
முனகல் சத்தங்களாய்
இந்த இருளை போல - நமக்கு
இரவின் பாதைகளும் நீள்கிறது...!
----அனீஷ் ஜெ...
![](https://1.bp.blogspot.com/-mllm8XA2qPc/YHiHc3V7npI/AAAAAAAACw0/EI1FO9_QgCszC5dpB07dtlDTw84rmWH4gCLcBGAsYHQ/s0/glsbanner11.gif)
ஆஹா...
ReplyDeleteஅருமை.
வாழ்த்துக்கள்.
like it
ReplyDeleteSupper
ReplyDelete