14 Oct 2013

சேர்ந்திருந்தால் சுகமே...

சேர்ந்திருந்தால் சுகமே...


நிசப்தங்களாலான - என்
நித்திரையை - உன்
கனவுகளால்
கலகலப்பாக்கினாய்...!

வெறுமையான - என்
வானத்தில்
வானவில்லின்
வன்ணம் சேர்த்தாய்...!

சருகுகள்
சலசலத்த - என்
சாலை பாதையில்
சட்டெனெ வந்து பூவிரித்தாய்...!

பேசத்தெரியாத - என்
பேனாவை
கவிதைகள் சொல்லி
கத்த வைத்தாய்...!

உன்னோடு சேர்ந்திருந்தால்
வலிகள் கூட வரமாகும்...!
சோகம் கூட சுகமாகும்...!!

----அனீஷ் ஜெ...





12 Sept 2013

காதல்... காமம்...

காதல்... காமம்...


உதடுகள் நான்கும் சேர,
உருவாகும் ஈர முத்தம்...!

விரல்கள் மொத்தமாய்,
விளையாடும் மவுன சத்தம்...!

தேகங்கள் கட்டிக்கொண்டு,
தொடர்கின்ற கட்டில் யுத்தம்...!

எல்லா காதல்களின்
இதய கதவுகளுக்கு பின்னாலும்,
மறைந்திருந்துகொண்டு
கண் சிமிட்டி எட்டிப் பார்க்கிறது
காமம்...!

காரணம்...
காமம் இல்லாமல்
காதல் இல்லை...!
காமம் இல்லையென்றால் - அது
காதலே இல்லை...!!

----அனீஷ் ஜெ...

31 Aug 2013

நிலா நிலா...

நிலா நிலா...


தொலைதுர நிலவாய் நீ...!
தொட்டுவிட துடிக்கின்றேன் நான்...!!


எரிக்காமல் என்னை
அணைத்து விடு...!


சிரிப்பாலே சின்ன
வெளிச்சம் கொடு...!!

 
----அனீஷ் ஜெ...


31 Jul 2013

தூக்கத்தில் நீ...

தூக்கத்தில் நீ...


தூக்கத்திலிருக்கும் என்னை
தட்டியெழுப்பும்
உன் நினைவுகளை,
கட்டியணைத்துக்கொண்டு
தூங்க முயல்கிறேன் நான்...!

கட்டியணைத்த என்னை
கண் மூட விடாமல்,
காதல் சொல்லி
கூடல் கொள்கிறது...!
உன் நினைவுகள்...

----அனீஷ் ஜெ...

3 Jun 2013

முத்தம் எனும் வித்தை !

முத்தம் எனும் வித்தை !


இதழோடு பேசிக்கொண்டே - என்
விரல் நுனியை - உன்
இதழ் நுனியால்
ஈரம் செய்கிறாய்...!

நிலவை காட்டி
நீ எனக்கு இதழூட்டும்
நிலாப்பொழுதுகளை
நினைவூட்டுகின்றன
தென்றல் ஸ்பரிசங்கள்...!

உன் உதட்டுமெத்தையில்
படுத்துறங்க
காத்துக்கிடக்கின்றன - என்
கன்னங்கள்...

உன் இதழோடு
வழிந்தோடும் வெட்கங்களை
நான் தினந்தோறும் - என்
இதழோடு சேமிக்கிறேன்...!

என் கோபங்களை - உன்
எச்சிலால் கரைக்கலாமென
எப்படி தெரியும் உனக்கு...!

நம்
உதடுகள் நான்கும்
உறக்கமில்லாமல்
யுத்தம் செய்யட்டும்...!
முத்தம் எனும் வித்தையால்...

----அனீஷ் ஜெ...

11 May 2013

விரல்களும்... விரல்களும்...

விரல்களும்... விரல்களும்...


குடையின்
கைப்பிடியில்
சத்தமில்லாமல்
உரசிக்கொள்கிறது...!
நம் கைவிரல்கள்...

என் விரல்களோ
உன் விரல்கள் மேல்
இரகசியமாய்
இடப்பெயர்ச்சி செய்கிறது...!

கடும் குளிரிலும் - உன்
கை விரல்கள் மேல்
மின்னலின் வெப்பம்...!

நெளியும் - உன்
விரல்களில் கூட
வழிந்தோடுகிறது
வெட்கங்கள்...

இறுக்கி பிடித்ததும்
அடங்கிப்போன
உன் விரலசைவில்
கிறங்கிப்போகிறது மனது...!

எனக்கே தெரியாமல்
உனக்குள் மூழ்குகிறேன் நான்...!

இந்த மழை மட்டும்
நிற்காமல்
நீடிக்க வேண்டும்...!
உன் காதலில் - நான் 

மூழ்கி முடியும் வரை...

----அனீஷ் ஜெ...

29 Apr 2013

பிரியாத நினைவுகள்...

பிரியாத நினைவுகள்...


என் இதயத்துடிப்பை போலவே,
உன்னை என் இதயத்தில் சுமந்த
என் காதலும்
உண்மையாகவே இருந்தது...!

பெற்றவர்களுக்காகவும்,
மற்றவர்களுக்காகவும்
உன்னை நான்
தூக்கியெறிந்தபோது,
தூக்கிலிட்டு கொல்லும்
வலி கொண்டது
உன் இதயம் மட்டுமல்ல...!
என் இதயமும் தான்...

ஏமாற்றுக்காரி என்ற பட்டமே
எனக்கு நீ கொடுத்தாய்...!
மற்றவர்கள் மறக்க சொல்ல
உள்நெஞ்சு
உன்னுடனே வாழ நினைத்தது...!

என் மவுனத்தின் அழுகைகள்
என் கன்னங்களில் வழிந்தோடி,
என் உள்ளங்கைகளில்
அடைபட்டு போனது...!
உனக்கது தெரிய வாய்ப்பில்லை...!!

விதியை வெல்ல
வழியில்லை என் நினைத்து
விட்டு சென்றேன் உன்னை...!

நீ இருக்கும்
இடம் கூட தெரியாமல்,
வாழ்க்கை பாதைகளில்
பிரிந்தே பயணிக்கிறோம்
நாம் இன்று...!

எப்பொழுதாவது எனக்குள்
எட்டிப்பார்க்கும்
உன் நினைவுகளிடம் - நான்
மறக்காமல் சொல்லிவிடுகிறேன்...!
மறந்துபோக சொன்னதற்காய்
மன்னித்துவிடு...

----அனீஷ் ஜெ...

16 Apr 2013

காதல் கைதி !

காதல் கைதி !


சில நாட்களாய்
நோட்டமிடுகிறேன்...!

எட்டிநின்றால்
ஏமாற்றம்தான் மிஞ்சும்...!

பழக்கமில்லாததால்
படபடக்கிறது மனது...!

திருடுவதைத் தவிர
வழியேதுமில்லை....!

ஆம் பெண்ணே...!

உன் இதயம் திருட
உன்னை பின்தொடர்கிறேன்...!

கண்டறிந்து என்னை நீ
கைதியாக்கிவிடு...!

உன் மனச்சிறையில்
அடைபட்டு - நான்
ஆயுள் முடிக்கிறேன்...

----அனீஷ் ஜெ...




2 Mar 2013

ரகசிய காதலன்...

ரகசிய காதலன்...


உனக்கே தெரியாமல்
நான் பெய்யும்
என் ஓரப்பார்வையின்
சாரல் மழையில் - நீ
நனைந்துவிட மாட்டாயா?

எனக்கே தெரியாமல் - நான்
உனக்குள் தொலைகின்றேன்,
என்னை நீ கண்டுகொண்டு
உனக்குள் ஒருநாள்
கண்டெடுக்க மாட்டாயா?

உனக்காக நான்
மண்ணில் வந்தேன்...!
உன் முன்னே
பெண்ணாய் நின்றேன்...!!
உன் கண்ணில் விழுந்து - நான்
உன்னில் எழுவது எப்போது..?

தலைகால் புரியாமல்
தனியே சிரித்தேன்...!
உறக்கத்திலும் கனவாக
உனையே நான் ரசித்தேன்...!!
உன் கையை பிடித்து - என்
முடியாத பயணங்கள் எப்போது?

உன்னை பொத்தி வைத்த
என் நெஞ்சத்தை
கொத்தி கொத்தி கொல்கின்றாய்...!
மிச்ச உயிரும் சாகிறது - என்னை
பத்திரமாய் மீட்பாயா?

கடிகார முள்ளாய்
நொடிநேரம் நிற்காமல் - என்
அடிநெஞ்சில் அலைகின்றாய்...!
உன் மடிமீது நான் மடியும்
வரமொன்று தருவாயா...?

உனக்கே தெரியாமல்
என் இதயம் முழுவதும்
உனையே சுமக்கின்றேன்...!
உனக்குள் தத்தளிக்கும்
என்னை நீ
காதல் தந்து
கரை சேர்த்துவிடு...!!
எனது இனிய
என் ரகசிய காதலனே...

----அனீஷ் ஜெ...


3 Feb 2013

இதயம் பறித்தவள்...

இதயம் பறித்தவள்...


என் இதயத்தை பறித்து,
உன் இதயத்தோடு
பொறித்து வைத்து
காதலென்றாய் நீ...!

எனக்காகவும் சேர்த்து துடிக்கும்
உன் இதயத்தின் துடிப்பு.
ஆயிரம் மைல்களுக்கு
அப்பால் இருந்தாலும்,
எப்பொழுதும் கேட்கிறது
எனக்குள்...

என்னை மனதோடு சுமந்து,
அன்பும் சேர்த்து பகிர்ந்து
அன்னை போலாகினாய் நீ...!

உனக்காய் தான் - நான்
உலகத்தில்
உயிர்கொண்டேன் என - என்
உயிருக்குள் சொல்கிறாய் நீ...!

சாய்ந்து கொள்ள - உன்
மடியிருக்கிறது என்ற
நம்பிக்கையில் தான்
சாகாமல் இன்னும்
மிச்சமிருக்கிறேன் நான்...!

இழப்பதென்பது
இந்த உலகத்தில்
இயல்புதான் என்றாலும்,
உன்னை இழந்தால்
வலுவிழந்த மலர்போல
வாடி உதிர்ந்துவிடும்...!
என் வாழ்க்கை...

----அனீஷ் ஜெ...