17 Jul 2009

பயணம்

அப்போது மாலை மணி ஐந்து...!
அதிக மக்கள் நெரிசலான
அந்த ரயில் நிலையம்...!!

அரைமணி நேர
என் காத்திருப்புக்கு பின்
அலறியடித்துக்கொண்டு வந்தது...!
அனந்தபுரி எக்ஸ்பிரஸ்...

எனக்குப் பிடித்த
ஜன்னலோர சீட்...!
ஏறி அமர்ந்து கொண்டேன்...

பெரிய சத்தத்தோடு
புகையையும் கக்கிக்கொண்டு
பயணமானது ரயில்...

ஆடி அசையும் மரம்...!
ஆகாய பறவைகள்...!!
ஆற்று வெள்ளம்...!
ஆட்டு மந்தை கூட்டம்...!!

அனைத்தையும்
அழகாய் காட்டியது...!
அந்த ஜன்னலோர சீட்...

அரைமணி நேரத்தில்
அலுப்பு தட்டியது எனக்கு...

அன்று காலை வாங்கிய
ஆனந்த விகடனை
அப்போது கையில் எடுத்தேன்...!

பக்கங்களை திருப்பி
படிக்க ஆரம்பித்தேன்...!

அதிகம் சிரிப்பை தராத ஜோக்ஸ்...!
ஆர்ப்பாட்டமான சினிமா செய்திகள்...!!
அப்போது ஏனோ
அதிலும் மனம் ஒட்டவில்லை...

மீண்டும் ஜன்னல் வழி பார்வை...

மனமோ இப்போது
மலையாய் கனத்தது...!
மறுபடியும்
அவள் நினைவுகள்...

மேகம்,
மேலே தெரிந்த வானம்,
வெற்றிடம்,
வெளியே தெரிந்த மரங்கள்
எல்லாவற்றிலும்
எனக்கு அவளே தெரிந்தாள்...

இதயத்தில் அவள்
இதழசைத்து பேசும் சத்தம்...
இமை மூடி ரசித்தேன்...!

உயிருக்குள் அவள்
உரக்க சிரிக்கும் சத்தம்...
உயிரோடு உணர்ந்தேன்...!

இரவு நேரம்...
இப்போது மணி பதினொன்று...

எதிர்பாராமல்
என் நோக்கியா அலறியது...!
எடுத்து பார்த்தேன்...!!
எனக்கு தெரியாத எண்...

அவளாய் இருக்கக்கூடாத என
அடிநெஞ்சு ஏங்கியது...!

பட்டனை அமுக்கியதும்
பாடுவதை நிறுத்தியது...!
என் செல்போன்...

எதிர் முனையில் அவள்...

ரயிலை விட்டு இறங்கி
நிலவை தொட்டு வந்ததாய்
எனக்கு உணர்வு...

என் காதோடு
ஏதேதோ பேசினாள்...!
அதை என் இதயமோ
அமைதியாய் ரசித்தது...!!

"பை" சொல்லி செல்போனை
வைத்தாள் அவள்...

மெதுவாய் நான்
எனக்குள்ளே புன்னகைத்தேன்...!
அவளும் ஒருவேளை
என்னைப்போல் புன்னகைத்திருப்பாள்...!!

இரவு மணி ஒன்றாகி
இப்போது இரண்டானது...!
இன்னும் தூக்கம் வரவில்லை...!!

ரயிலோ தண்டவாளத்தோடு
ரகசியம் பேசிக்கொண்டு
ராத்திரி பயணித்துக்கொண்டிருந்தது...!

நீண்ட நேரத்திற்குப் பின்
நிம்மதியில்லாத ஒரு தூக்கம்...!
கனவிலும் என்னோடு வந்து
காதல் செய்தாள் அவள்...!!

அவள் எனக்குரியவள் அல்ல...!
ஆயிரம் முறை சொன்னேன்...!!
என் மனதோடு...

மனமோ அதை
மறுத்தது...!
காரணம் சொன்னேன்...!!
கண்டுகொள்ளவில்லை மனது...

எனக்கு தெரிந்தது
என் மனதிற்கு
ஏனோ புரியவில்லை...!

என் பயணம் முழுவதும்
என்னோடு பயணம் செய்தது...!
அவள் நினைவுகள்...

இறங்க வேண்டிய இடம்...

இறங்கி விட்டு,
இரயிலை பார்த்து
என் கண்கள் நனைய
எனக்குள்ளே நான்
நினைத்துக்கொண்டேன்..

எந்த பயணமும்,
எந்த ரயிலும்
என்னை
அவளிடம் கொண்டுபோய் சேர்க்காது...!
ஏனென்றால்
அவள் எனக்குரியவள் அல்ல....


-----அனீஷ்...
SHARE THIS

7 comments:

  1. very nice romba nalla eruku

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. அனைவருக்கும் நன்றி !!

    ReplyDelete
  4. ஒரு பயணத்தில் இப்படி ஒரு சுவாரசியமா

    very nice poems

    by

    livina

    ReplyDelete