10 Oct 2010

கானல் ஆகும் கனவுகள்


சகதியாய் கிடக்கும் சாலை...!
அழுக்கடைந்த தெருக்கள்...!!
இவைகள் தான் -என்
விளையாட்டு மைதானம்...

பனிரெண்டு வயதாகிறது...!
பசியை தவிர எதையும்
அதிகமாய் ருசித்ததில்லை...!

கடந்த ஆண்டு
கவர்மென்ட் பள்ளிக்கூடத்தில் தந்த
காக்கி கலர்
கால்சட்டை
இப்போதும்
இடுப்பில் நிற்க்கவில்லை...!

ஓடாமல் கிடந்த சைக்கிளின்
ஒற்றை டயர் ஒன்று
நான் ஊர் சுத்தும்
பென்ஸ் கார் ஆகிறது...!

பழைய கஞ்சியும்
பச்சை மிளகாயும் தான்
எப்போதாவது
என் பசியை போக்குகிறது...!

ஐந்துமணி வரை பள்ளிக்கூடம்...!
அதற்கு மேல் கபடி ஆட்டம்...!!
சின்ன சின்னதாய் இப்படி
சில சந்தோஷங்கள்...!!!

கடந்த மாதம்
காசுக்கு வழியில்லை என்று
கல் உடைக்க போகச் சொல்லி
கட்டளையிட்டாள் அம்மா...

மறுத்த போதும்
மனமிரங்கவில்லை அம்மா...!
கனவுகளெல்லாம் இப்போது
கானல் ஆனது...!!

படித்த
பள்ளிக்கூடத்தை
கடந்து செல்லும்போதெல்லாம்
கனமாகிறது மனது...

உச்சி வெயிலில் நின்று
கல் உடைக்கும் போது
மனசும் சேர்ந்து உடைகிறது...!
நான் பணக்காரனாய்
பிறந்திருக்க கூடாதா....

-----அனீஷ்...
SHARE THIS

5 comments: