31 Aug 2012

மலராதே மலரே...


அவள் பார்வை பட்டு
மொட்டொன்று எனக்குள்
முட்டி விரிவதை உணர்கிறேன்...!

வாழ்க்கையை வாசம் வீச வைப்பதாய்
வாக்குறுதி அளித்துவிட்டு
வளரப் பார்க்கிறது அந்த மொட்டு...!

ஏய் என் மனச்செடியே
விடியும் முன் - மொட்டு
விரியும் முன் - அதை
முளையிலே கிள்ளியெறிந்துவிடு...!

ஏனென்றால்
முழுதாய் விரிந்தபின்
வாடி உதிர்ந்துபோய் - உனக்குள்
காயம் ஏற்படுத்திவிடலாம்...!
காதலென்னும் அந்த மலர்...

----அனீஷ் ஜெ...





SHARE THIS

6 comments:

  1. அருமையான கவிதை! பாராட்டுக்கள்!

    இன்று என் தளத்தில் சுயநலமிக்க பூதம்! பாப்பாமலர்!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post.html

    ReplyDelete
  2. சூடு பட்ட பூனை... அப்படித்தான் அனைத்தையும் எடுக்கும்:R:R:R.

    அழகான கற்பனை...நிஜமாத்தான் சொல்றேன்.

    ReplyDelete
  3. arumaiyana alagana varigal. yen love panniduvinga payama life la ithu ellam varum nu yaro sonna mathiri irundhuchi ippo yen payam nu than theriyala.. super super.. super anish..

    ReplyDelete
  4. @s suresh: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி ! :)

    ReplyDelete
  5. @athira: Ha Ha... கண்டுபிடிச்சிட்டீங்களே... ;);)

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி ! :)

    ReplyDelete
  6. @kilora: அட... தமிழ் சினிமா வில்லன் மாதிரி சைஸ்’ல பொண்ணுக்கு அண்னன்கள் இருந்த லவ் பண்றதுக்கு கூட பயப்பட்டுதாங்க ஆகணும்... :R:R

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி ! :)

    ReplyDelete