4 Dec 2012

காதல் கதைகள் !


பேருந்து இருக்கைகளின்
பின்புறத்தில்
கிறுக்கி வைக்கப்பட்டிருக்கும்
இதய வரைபடத்தின்
இடையில் திண்டாடும்
இரண்டு பெயர்கள்...!

கல்லூரி நாட்களில்
காலை முதல்
மாலை வரை - தன்
காதலியை பற்றி
உளறியே - என்
உயிரெடுக்கும் நண்பன்...!

காதலுக்காக
உயிர்விடவும் துணியும்
சினிமாவின்
கதாநாயக கதாபாத்திரங்கள்...!

பெற்றோரை துறந்துவிட்டு,
எல்லாவற்றையும் மறந்துவிட்டு,
எவருக்கும் தெரியாமல்
மாலை மாற்றிக்கொள்ளும்
ரகசிய காதல் திருமணங்கள்...!

இந்த நிகழ்வுகள் அத்தனையும்
முட்டாள்களின் கதைகளாகவே
தெரிந்தன எனக்கு...!
அவளை நான்
சந்திக்கும் வரையில்...

----அனீஷ் ஜெ...


SHARE THIS

4 comments:

  1. nice anish.. kadhal poi pithan aniro anish..

    ReplyDelete
  2. very super ur all poems
    thanks..

    ReplyDelete
  3. வணக்கம்
    இன்று வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் அருமையான கவிதை,
    பார்வைக்குhttp://blogintamil.blogspot.com/2013/03/blog-post_14.html
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete