கொட்டும் மழையில்,
சொட்டும் துளியில்,
பட்டுக் குடையோடு
பயணிக்கிறாய் நீ...
குடையின் நுனிவழியே,
நுழைந்து உள்ளே வரும்
மழைத்துளியோ - உன்
கன்னத்தை தொட்டு
காதல் செய்கிறது...!
குறுகுறுவென பார்க்கும்
குடையோ - உன்
கைவிரலின் தொடுதலோடு
இறைவனோடு
வேண்டிக்கொண்டிருந்தது...!
இவள் பயணங்களிலெல்லாம்
மழை வேண்டுமென...
----அனீஷ் ஜெ...
![](https://1.bp.blogspot.com/-mllm8XA2qPc/YHiHc3V7npI/AAAAAAAACw0/EI1FO9_QgCszC5dpB07dtlDTw84rmWH4gCLcBGAsYHQ/s0/glsbanner11.gif)
0 விமர்சனங்கள்: