
இரவு பகலாய்
இதயம் கொன்றாய்...!
அரக்கி போலவே
அதையும் தின்றாய்...!!
பாதி உயிரின்
மீதியை கேட்டேன்...!
விதி இதுவென்று
மிதித்தே சென்றாய்...!!
பாதை நடுவில்
பள்ளங்கள் தைத்தாய்...!
போதையானவன் போல
தள்ளாட வைத்தாய்...!!
நெஞ்சின் நடுவில்
ஊசி துளைத்தாய்...!
கெஞ்சிய என்னை
வீசியெறிந்தாய்...!!
சிரித்தால் அதையும்
அழுத்தி பறித்தாய்...!
மரிக்க சொல்லி
கழுத்தை நெரித்தாய்...!!
தவறி விழுந்தேன்
கைதட்டி சென்றாய்...!
கதறி அழுதேன்
கைகட்டி நின்றாய்...!!
வரங்கள் எதுவும் - நீ
தர வேண்டாம்...!
தரும் வலிகள் எதையும்
பின்வலிக்கவும் வேண்டாம்...!!
உயிருடன் என்னை கொஞ்சம்
உலகத்தில் வாழவிடு...!
வாழ்க்கை எனும் அரக்கியே...
----அனீஷ் ஜெ...
Send Your Comments on Whatsapp. Click Here
beautiful lines
ReplyDelete