![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAu2-p6NjaKi2rlP6cGu-y9iGjJUiveCqbrXb6RwkHE8MA9z1Qjfa2NHft-mFLF6lwAGDY4qbNb_zzPsUauwIVNJdHGvtT6KFLN7JT6uHdBbZOeXz-eyS5DKeXuJnlZ_21pImd8kYqywl1/s1600/rr.jpg)
வாய்கிழிய சொன்ன - உன்
வார்த்தை சத்தியங்கள்
கிழிந்து தொங்குகிறது...!
என் எச்சில்பட்ட
உன் உதடுகளை,
இன்னொருவனுக்காய்
இறுக்கிப்பிடிக்கிறாய்...!
மரணத்தால் மட்டுமே நம்மை
பிரிக்கமுடியுமென நீ சொன்னது
மரணித்தே போய்விட்டது...!
பிரிவுகளை மட்டுமல்ல,
உன் வார்த்தைகளால்
வலிகளையும் சேர்த்தே தந்தாய்...!
நீ தந்த காயங்களை விட
என் கோபங்கள்தான் பெரிதாகிறது...!
எல்லைகளே இல்லாமல்
உன்னை வெறுக்கிறேன் நான்...!
ஏனென்றால்
தேவதையின் முகமூடியணிந்த
சாத்தான் நீ...
----அனீஷ் ஜெ...
![](https://1.bp.blogspot.com/-mllm8XA2qPc/YHiHc3V7npI/AAAAAAAACw0/EI1FO9_QgCszC5dpB07dtlDTw84rmWH4gCLcBGAsYHQ/s0/glsbanner11.gif)
0 விமர்சனங்கள்: