![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_7XRYzntabAEPEBsw0Z7UOzmMetVZ3pGmI_0QSoxtERrW2fVsIl3eJukaxcLzCjvMXEieEUvETgq7HfRjE7NsYMwtJsBJthDsepnzzkKuHWnMkKk9BfJpestkS0JzVnZxW0XDiFdjge_S/s1600/rrrrrr.jpg)
மவுனம்
மனம் உடைத்தாள் அவள்...!
ஒரு யுக காதலை
ஒரு சிறு வார்த்தையால்
தகர்த்தாள்...!
தீரா காதலென்றவள் இன்று
நேர விரயமென்று - என்
ஈர விழி செய்கிறாள்...!
பாதி கிறுக்கி,
மீதி நொறுக்கி இதயத்தை
வீதியில் வீசி எறிகிறாள்...!
தந்தைக்காய்
எந்தன் காதலின்
நெஞ்சில் உதைத்தாள்...!
காதலென்று என்னை
காயப்படுத்தி மறப்பதற்கு - அன்றே
காதலென்று நான் வந்தபோது
கண்டுகொள்ளாமல்
மறுத்திருக்கலாம்...!
காரணம்...
மறுக்கப்படும் வலியை விட
மறக்கப்படும் வலியே பெரியது...!
----அனீஷ் ஜெ
Written By : Anish J.
Requested By : Pavithran.
![](https://1.bp.blogspot.com/-mllm8XA2qPc/YHiHc3V7npI/AAAAAAAACw0/EI1FO9_QgCszC5dpB07dtlDTw84rmWH4gCLcBGAsYHQ/s0/glsbanner11.gif)
அருமை.
ReplyDelete