
விடைதெரியாத கேள்விகளுடன் - உன்
கடைக்கண் பார்வைக்காய்
காத்துநின்றேன் நான்...!
கண்களில் வழிந்த - என்
கண்ணீரை அலட்சியபடித்தி - உன்
வழிகளில் மறைந்தாய் நீ...!
உன் பெயர் சொல்லியே
உரக்ககத்தும் நினைவுகளை
உறங்கவைக்கும் தாலட்டை
உயிருக்குள் தேடி உருகுகிறேன்...!
உன் எச்சில் பட்ட
என் உதடுகள்...!
உன் விரல்கள் தொட்ட
என் கன்னங்கள்...!
இவையனைத்தும் நினைவாலயாமாய்
கண்ணாடிமுன் தெரிகிறது....!
மறக்கும் முயற்சிகளில்
சிறிதும் முன்னேற்றமில்லை...!
ஆதலால் நான்
அம்முயற்சியை விட்டுவிட்டேன்...!
தீவிரமான தேடல்களில்தான்
தீர்வுகள் கிடைக்கிறது...!
மறப்பதென்பது இங்கு
மரணிப்பதைபோல எளிதானதல்ல...
----அனீஷ் ஜெ...
Send Your Comments on Whatsapp. Click Here
marappatarkku maranam theervu ena ennuvom mattoruvar varum varai.
ReplyDeleteஅழகான கவிதை வரிகள்Nice super
ReplyDelete