
உன் சிறு குறுஞ்செய்தியுடன்
என் அலைபேசி உதிர்க்கும்
ஒரு நொடி வெளிச்சத்திற்காய்
இருட்டிலே காத்திருந்த நேரங்கள்...!
எதிர்படும் உன்னை
நிமிர்ந்துபார்க்க மறுத்து
தரைநோக்கி கடந்து சென்று
திரும்பிபார்த்து தவித்த தருணங்கள்...!
கனவுகளா, மனதின் கற்பனையா
நினைவுகளா இல்லை
நீ வந்ததா என குழம்பியே
நான் தொலைத்த தூக்கங்கள்...!
உன்னோடு பேச முயலும்
முறைகள் ஒவ்வொன்றும்
ஓசையில்லாமல் உள்ளே
உதடுகளில் மடியும் வார்த்தைகள்...!
தினம் கொல்லும் காதலுடன்
உன்னிடம் சொல்ல எனக்கு
சொல்லாத கதைகள் பல இருக்கிறது...!
நீ மட்டும் என்னோடு இல்லை...
----அனீஷ் ஜெ...
Written By : Anish J.
Requested By : Keerthana.
Send Your Comments on Whatsapp. Click Here
Very nice ,thanks a lot
ReplyDeleteYou r welcome. :-)
DeleteNice
ReplyDeleteThank UUUUUUUU
Delete