8 Sept 2010

நீ...




கோடி நிலா
கூடி வந்ததுபோல்
உன் முகம்...
பவுர்ணமி நிலா கூட
பார்ப்பதற்கு இவ்வளவு அழகில்லை...!

வெள்ளை நதியில்
துள்ளி விளையாடும் -இரு
புள்ளி மீன்களாய்
உன் கண்கள்...

பிரம்மன் என்னை விட
பிரமாதமாய் கவிதை எழுதுகிறார்...!
கவிதையாய் உன் இரு
கன்னங்கள்...

இருவரி கவிதையாய் -உன்
இரு இதழ்கள்...!
அது உதிர்க்கும் வார்த்தைகளோ -என்
அடிநெஞ்சில் இசையாய்...

இருட்டை விழுங்கும்
இரவு நேர நட்சத்திரங்கள்...!
உன் கூந்தலிலிருந்து
உதிரும் பூக்கள்...

உன் கை பட்ட
உன் பேனாவின்
கிறுக்கல்கள் கூட
கவிதைகளாகும்....

கடற்கரை மணலில் -உன்
கால்கள் பதித்த சுவடுகளை -அந்த
கடல் அலையும் ஒருவேளை
காதலிக்கும்...

அழகு என்பது வெறும்
சொல் மட்டும் இல்லை...!
நீ இல்லை என்றால்
அழகென்ற சொல்லே இல்லை...!!


-----அனீஷ்...
SHARE THIS

2 comments: