16 Sept 2010

பிரிந்துவிடாதே என்னை...


இயங்காமல் கிடந்த -என்
இதயத்துடிப்பின்
இடைவெளிக்கிடையில்
இசையை ஊற்றியவள் நீ...!

நிர்வாணமாய் கிடந்த -என்

நித்திரைக்கு
கனவுகளால்
ஆடை நெய்தவள் நீ...!

பச்சை நரம்பின்

பகுதி ஒவ்வொன்றிலும்
பரவசம்
பாய்ச்சியவள் நீ...!

உடைந்து கிடந்த -என்

உயிர் சிறகுகளை
ஓரப்பார்வைகளால்
ஒட்ட வைத்தவள் நீ...!

பேசத் தெரியாத -என்

பேனா முனைகளுக்கு
கவிதை பேச
கற்றுக் கொடுத்தவள் நீ...!

என் மூச்சுப்பையின்

ஏதோ ஒரு முனையில்
எனக்கு எல்லாமாய்
கலந்து கிடப்பவள் நீ...!

நட்பாய்,

கடைசியில் காதலாய்
மனதை
மழையாய் நனைத்தவள் நீ..!

இதயத்தில் அல்ல -உன்னை
உயிரில் சுமக்கிறேன் நான்...!
பிரிந்துவிடாதே என்னை...!!
மரித்துப் போய்விடுவேன் நான்...

-----அனீஷ்...

SHARE THIS

4 comments:

  1. ohhhhhhhhhhhh satyama touching heart vartaigal nenju kulla pogiradu

    ReplyDelete
  2. very goood kavitai.................. :)

    ReplyDelete