17 Oct 2010

நான் இங்கு நலமில்லை


வலி கொள்ளும் நெஞ்சமோ
கொஞ்சம் கொஞ்சமாய்
பாலியாகிப் போகிறது...!

மனமோ
மரத்துப்போய்
மரணவலியில் துடிக்கிறது...!

திரும்பும் இடமெல்லாம்
தீயாய் சுடுகிறது வாழ்க்கை...!

உண்ணும் உணவை கூட
தொண்டைக்கு கீழே
அண்ட விடாமல்
தொந்தரவு செய்கிறது கவலைகள்...!

நரம்புகளிலெல்லாம்
குருதி கூட
ஓடாமல் அடம்பிடிக்க,
கண்ணீர் துளிகளோ
கன்னங்களில்
கங்கை நதிபோல்...

உச்சகட்டமாய்,
உயிரோ
உள்ளுக்குள் வெடிக்கிறது...!

எல்லாமே என்னை
கொல்ல நினைத்தாலும்,
எனக்குள்ளே எழுகிறது...!
ஏதேதோ கேள்விகள்...

எங்கிருக்கிறா
ய் நீ...?
எப்படி இருக்கி
றாய் நீ...??

விடை தெரியாமல்
விட்டு விட்டு
பைத்தியமாகிப்போகிறேன் நான்...!

எதுவுமே செய்ய முடியாமல்
ஏங்கி தேம்புகிறேன் நான்...!

கவலையோடு காத்திருக்கும்
நிமிடங்கள் தோறும்
கல்லறை எழுகிறது...!
என்னை சுற்றி...

சுவாசமாய் வந்தவள் நீ - என்
சுவாசம் பறித்து செல்லாதே...!
என் இதயமாய் துடிப்பவள் நீ - என்
இதயம் உடைத்து கொல்லதே...!!

நீ இல்லாத
சொர்க்கம் கூட
எனக்கு நரகம்தான்...!
நீ மறந்தால்
மறுகணமே எனக்கு
மரணம்தான்...!!

எங்கிருந்தாலும்
என்னருகில் வா நீ...!

என்னருகில் நீ இல்லாமல்,
நீ எப்படி இருக்கிறாய்
என்பதை கூட தெரியாமல்,
உன் நினைவுகளோடு சாகும்
நான் இங்கு நலமில்லை...

-----அனீஷ்...
SHARE THIS

2 comments: