28 Nov 2010

அம்மா...


உன் மூச்சு காற்றே
என் முதல் மூச்சானது...!
அம்மா என்று நான் அழைத்ததே
எனக்கு முதல் பேச்சாசானது...!!

நீ ஊட்டிய சோறே
எனக்கு அமுதமானது...!
நீ காட்டிய நிலவே
எனக்கு முதல் பொம்மையானது...!!

நான் சிரித்தால்
நீ சிரிக்கின்றாய்...!
நான் அழுதால்
நீயும் அழுகின்றாய்...!!
பிம்பமே இல்லாத
பிரமிப்பான கண்ணாடி நீ...

உயிர் தந்தவள் நீ...!
உடன் வருபவள் நீ...!!
கைதொடும் தூரத்திலிருக்கும்
கடவுளும் நீ...!!!

உயரம் கொண்ட
உன் அன்புக்கு கீழே,
சிகரங்கள் கூட
சிறியதாகிப் போகும்...!

உன் மடி மீது
கொஞ்சம் தலைசாய்த்தால்
வலிகள் கூட
சுகமாக மாறும்...!

இனியும் நான்
ஆயிரம் ஜென்மம் கண்டாலும்
தாயே - நான்
உன் கருவறையிலையே
உயிர் கொள்ள வேண்டும்...

-----அனீஷ்...
SHARE THIS

9 comments:

  1. amma is great no doubt good poem

    ReplyDelete
  2. got tears when i was reading. u r amazing.

    ReplyDelete
  3. anish new look of ur website is very nice dear

    ReplyDelete
  4. Smitha waiting fr ur nxt kaviti.. :)

    ReplyDelete
  5. அம்மாவிற்கு ஈடுயிணை இவ்வுலகில் இல்லை...

    அருமை... வாழ்த்துகள்...

    ReplyDelete
  6. அம்மா இல்லாமல் ஒரு உயிருமில்லை

    ReplyDelete
  7. REALLY VERY NICE!!!

    ReplyDelete
  8. amma is always special

    ReplyDelete