![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjdqVS9st6Y8XZQhNJ710kbZS35UAN4RdLD06GrCVYGha9vtJhTozGLqmbg3bMgGRpmmrRMvJnE6jVzsEUyS-bbqQNwOEw6x5SajK7q5kyEj7PK_MrMU4R3iivqLw1Xdi6wuMVja9YvaBDS/s1600/bbbbb.jpg)
வாசித்து முடிக்கும்முன்
சலித்துப்போன புத்தகம்..!
சுவாரசியம் தொலைந்தபின்
பத்திரப்படுத்தி வைப்பதில்
பலனேதும் இல்லை...!
கிழித்தெறிந்து,
அழித்துவிடலாமென
அடிக்கடி கைக்குள் மடிக்கிறேன்...!
மனசாட்சியில்லாமல் கொல்ல - ஏனோ
மனம் கொள்ளவில்லை...!
தனிமையில் உட்கார்ந்து
திரட்டிய பக்கங்களையெல்லாம்
புரட்டிப்பார்க்கிறேன்...!
படித்து முடித்த
எந்த பக்கத்திலும்,
என்னை மகிழ்ச்சிப்படுத்துமளவுக்கு
எந்த காரணமும் இல்லை...!
இன்று படித்த பக்கதிலும்
இதேதான் தொடர்கிறது...!
நம்பிக்கையுடன்
நாளை எனும் பக்கததை
நான் திருப்பிதான் ஆகவேண்டும்...!
அடுத்த பக்கத்தில்
அதிசயங்கள் காத்திருக்கலாம்...!
அழவைப்பதற்கான காரணங்களும் இருக்கலாம்...!!
அதுவாகமே முடியும்வரை - நான்
வாசித்துக்கொண்டிருக்கவேண்டும்...!
வாழ்க்கை எனும் புத்தகத்தை...
----அனீஷ் ஜெ...
![](https://1.bp.blogspot.com/-mllm8XA2qPc/YHiHc3V7npI/AAAAAAAACw0/EI1FO9_QgCszC5dpB07dtlDTw84rmWH4gCLcBGAsYHQ/s0/glsbanner11.gif)
வாழ்க்கை தொடங்கும் முன்பே முடிந்து விட்டது
ReplyDelete