
உடையணிந்து
உலாவரும் நிலா நீ...!
நீ அணியும் வரை
நிர்வாணமாகவே கிடந்தது
நீ அணிந்திருக்கும் ஆடை...!
உலகத்தின் அழகனைத்தையும்,
ஐந்தடி ஆடையொன்றில்
அடைத்து வைக்க முடியுமா என்றொரு
ஐயம் எனக்கின்று
உன்னை பார்த்ததும் நீங்கியது...!
நீ அணிந்தால்,
காற்றில் பறக்க கூட
முந்தானைகள் விரும்புவதில்லை...!
இறுக்கமான ஆடைகளை - நீ
அணியும் போதெல்லாம்
மூச்சு முட்டுகிறது...!
ஆடைகளுக்கு...
உன் உடையாக பிறக்காதது
எனது துரதிர்ஷ்டம்...!
உன் உடை தடவி செல்லும்
தென்றலாககூட பிறக்காதது
எனது மிகப்பெரிய துரதிர்ஷ்டம்...!!
----அனீஷ் ஜெ...

கவிதை நன்று.
ReplyDeleteவாழ்த்துக்கள்....
First class
ReplyDelete