24 Feb 2016

யாரோ ஒருவள் !


உன் காலடி மண்ணை
உள்ளங்கையில் பிடித்து - என்
உயிருக்குள் தூவுமளக்கு
உன் மேல் காதலில்லை எனக்கு...!

பேருந்து நிறுத்தம்,
கடைத்தெரு என - நீ
போகும் இடங்களில்
காத்திருக்கவும் விருப்பமில்லை எனக்கு...!

எதிர்படும் உன்னை
என் விழிகளாலே வீழ்த்தும்
எண்ணமில்லை எனக்கு...!

பக்கத்தில் நீ வந்தால்
படபடக்கவும் இல்லை...!
தூரத்தில் நீ போனால் - நான்
துயரம் கொள்ளவும் இல்லை...!!

கனவுகளில் நீ வருவதில்லை...!
காலையின் முதல் நினைவும் நீயில்லை...!!

என்றாவது நீ
என் கண்ணில்பட்டு மறையும்போது,
இன்னொருமுறை பார்க்க - என்
இருவிழிகள் தேடும்
யாரோ ஒருவள் நீ...!

----அனீஷ் ஜெ...


SHARE THIS

1 comment: