2 Feb 2016

மனச்சித்திரம் !


இதயம் கொய்து - உன்
இரு கைகளில் வைத்தேன்...!
இதுவா காதலென்றாய் நீ...

கால் வலிக்க காத்து நின்றதும்,
கண் வலிக்க பார்த்து நின்றதும்
காதலில்லாமலா என் காதலியே...

சின்ன வார்த்தையிலும் - உன்
சிறு புன்னகையிலும் கூட
சிலிர்த்துப்போகிறான் நான்...!
சிறிதேனும் யோசித்துப்பார்...

வரங்களை மட்டுமே தர வந்த,
வானத்து தேவதையாய் - என்
வழிகளிலெல்லாம் தென்படுகிறாய் நீ...
வரவில்லையா உனக்கு காதல்...

குருவிக்கூட்டமொன்று,
கூடொன்று கட்டிய சலசலப்போடு
குடியேறிவிட்டாய் நீ என் நெஞ்சுக்கூட்டில்...!
குழப்பமா இன்னும் உனக்கு...

உன் காதல் வேண்டியே,
கரைந்து போகிறேன் நான்...!

அன்பிருந்தால் - என்னை
அள்ளியெடுத்து,
சித்திரமாய் மனதில் வரைந்துவிடு...!
இல்லையென்றால்,
பத்திரமாய் மண்ணில் புதைத்துவிடு...!

----அனீஷ் ஜெ...

Written By : Anish J.
Requested By : Fayed.
SHARE THIS

0 விமர்சனங்கள்: