
திரும்பிப்பார்த்தேன்...!
திரும்பிக்கொண்டாள்...!!
புன்னகைத்தேன்...!
முகம் மறைத்தாள்...!!
காத்திருந்தேன்...!
விலகி நடந்தாள்...!!
தொடர்ந்து சென்றேன்...!
வேகமாய் மறைந்தாள்...!!
பேசி நின்றேன்...!
முறைத்து சென்றாள்...!
பெயரை கேட்டேன்...!
மவுனம் தந்தாள்...!!
நலமா என்றேன்...!
சாத்தானே போ என்றாள்...!!
என் காதல் சொன்னேன்...!
நான் யார் தெரியுமா என்றாள்...!!
தெரியும் என்றேன்...!
விழிகள் விரித்தாள்...!!
நான் சொன்னேன்...!
நீ என்பவள் நான் என்னும்
சாத்தானின் தேவதை...
----அனீஷ் ஜெ...
Send Your Comments on Whatsapp. Click Here
0 விமர்சனங்கள்: