Bookmark இப்படிக்கு அனீஷ் ஜெ

ஓர் இரவு !


நிலவைப்போல்
நீ தனித்திருக்க,
இரவைப்போல்
விடியும்வரை
உன்னருகில் நான்...

அசைந்தாடும் - உன்
விழிகளில்
விழுந்து எழுகின்றது
என் மோகங்கள்...!

வளைந்தாடும் - உன்
இடையோடு
விளையாடும் - என்
விரல்கள் பத்து...!

தொட்டவுடன் நீ
பிரசவிக்கிறாய்
வெட்கங்களை...

கட்டியணைத்து - நான்
வள்ளலாகிறேன்
முத்தங்களால்...

எரிமலை வெப்பமாய்
உள்ளுக்குள் குமுற
விடுதலை வேண்டி
தவம் கிடக்கின்றன...!
பனிமலை பிரதேசங்கள்...

தொட்டவுடன் சிணுங்கும்,
அர்த்தமில்லாமல் முணுங்கும்
மலர் என் கைகளில்...

பெய்து தீராத
அடைமழையில்,
நனைந்து விரிகின்ற
குடையாகிறாய் நீ...!!

உணர்வுகள் கட்டிக்கொள்ள
இரவு தொடர்கிறது...!

இரவு முடிந்து
பகல் பிறந்ததும்,
எனக்குள் பிறந்தது
ஒரு கவிதை...!
“ஓர் இரவு”

----அனீஷ் ஜெ...
இந்த கவிதையை உங்கள் “FaceBook” நண்பர்களுக்கு அனுப்ப

திருக்குறள்