கொஞ்சம் கொஞ்சமாய்
உனக்குள் சரிந்தேன்...!
நீ பேசும் கணங்களில்...
மெல்ல மெல்லமாய்
உயிர் போகாமல் மரித்தேன்...!!
நீ சிரிக்கும் தருணங்களில்...
தட்டுத்தடுமாறி
விழுந்தேன் எழுந்தேன்...!
உன் கன்னக்குழியில்...
தொட்டு சூடேறி
புதைந்தேன் தொலைந்தேன்...!!
உன் நெஞ்சுக்குழியில்...
பனித்துளியாக உருகி
விண்வெளியோடு பறந்தேன்...!
தூரத்தில் நீ என்னை பார்க்கும்போது...
புல்வெளிமேலே பூக்கும்
மழைத்துளியாகிப் போனேன்...!!
தூக்கத்தில் உன் கனவுகள் என்னை தாக்கும்போது...
என் செல்கள் எல்லாம்
சில்லாக உடையும்...!
நீ இல்லை என்றால்...
சொல்லாத ஆசைகள்
மெல்லமாய் கைகூடும்...!!
நீ என் அருகில் நின்றால்...
-----அனீஷ்...

Send Your Comments on Whatsapp. Click Here
very nice
ReplyDeleteSuperb!!!
ReplyDeletevery good thought. all the best aneesh
ReplyDeletev good superb
ReplyDeleteVery nice...
ReplyDeleteIpadi oruthan kedaikanumnu than ella girlsum virumbuvaanga...
Kalakureenga...!
:C :C :C
:) Ganesh
ReplyDelete:) Jeenu
:) Gayathri
:) anishka nathan
:) Kaavya
அனைவருக்கும் ரொம்ப நன்றி...!!