6 Sept 2010

நீயும்... உன் நினைவுகளும்...


சுவாசிக்கும் காற்றிலும்
சுவடுகளில்லாமல்
சுற்றி வருகிறாய் நீ...!

ஊமையான என் இதயத்தை
உன் பெயர் சொல்லி
உரக்க கத்தவைக்கிறாய் நீ...!

பேசும் வார்த்தைகளில்
பாதி வார்த்தைகளுக்கு
பதிலகிறாய் நீ...!

ராத்திரி கனவுகளில்
ரகசியமாய் புகுந்து
ரகசியம் பேசுகிறாய் நீ...!

காற்றில்லாமல் ஒருவேளை
வாழ்ந்துவிடுவேன் நான்...!
ஆனால் மரித்துப்போய்விடுவேன்... !!
நீயும்
உன் நினைவுகளும்
இல்லாமல் போனால்....


------அனீஷ்...
SHARE THIS

4 comments: