9 Sept 2010

என்ன தரப்போகிறாய் நீ எனக்கு...


பூவா -இல்லை நீ
பூகம்பமா...!
நிலவா -இல்லை நீ
நிஜமில்லையா...!!

ஆறடி உயரத்தை

அதற்க்குள்ளே மோகத்தை
அமிலமாய் ஏன் தெளித்தாய்...!

இளமையின் ஈரத்தை

இதயத்தின் ஓரத்தை
இரு விழிகளால் ஏன் அறுத்தாய்...!

ராத்திரி நிலவாய்

ரகசிய கனவில்
ரதியே ஏன் நுழைந்தாய்...!

ஏதோ சொல்லும் பார்வையை

என்னை கொல்லும் காதலை
எனக்குள்ளே ஏன் விதைத்தாய்...!

இறக்குது இதயம் -உன்

இருவிழி பார்வையில்...
பறக்குது மனது -உன்
பார்வையின் சிறகினில்...

மறுப்பதில் நியாயமில்லை

மனதை எனக்கு தந்துவிடு...!
மனதை நீ தரமறுத்தால்
மரணத்தையாவது எனக்கு கொடு...!!

 

-----அனீஷ்...
SHARE THIS

4 comments: