15 Sept 2010

காதல் வரும் நேரம்


மனமோ இங்கு
மழையில் நனையும்...!
உணர்வுகள் மெல்ல
குடையாய் விரியும்...!!

கால்கள் இரண்டும்

காற்றில் பறக்கும்...!
கைகளில் மெதுவாய்
பொய் சிறகுகள் முளைக்கும்...!!

விழிகள் இரண்டும்

உறக்கம் மறக்கும்...!
கனவில் புதிதாய்
நிறங்கள் பிறக்கும்...!!

உளறும் வார்த்தைகள்

கவிதைகளாகும்...!
மவுனங்கள் கூட
இசைகளாகும்...!!

உயிருக்குள் புதிதாய்

உயிரொன்று சேரும்...!
இதயம் நொடிதோறும்
இறந்து பிறக்கும்...!

எல்லாம் இந்த

காதல் வரும் நேரம்...

-----அனீஷ்...
SHARE THIS

1 comment: