17 Sept 2010

நீ இல்லை என்றால்...


கால்கள் முளைத்த
நிலவாய் நின்றாய்...!
காற்றில் மிதக்கும்
இசையாய் வந்தாய்...!!

சுவாசத்தில் புகுந்து

உயிருக்குள் கலக்கிறாய்...!
நினைவுக்குள் நீயும்
நிஜங்களாய் மிதக்கிறாய்...!!

இதயத்தில் எனக்கொரு

இடம் தர மறுக்கிறாய்...!
தூரத்தில் இருந்தும்
தூக்கம் கெடுக்கிறாய்...!!

தினசரி கனவில்

தரிசனம் தந்தாய்...!
முகத்தை மறைத்து -என்னை
முழுதாய் கொன்றாய்...!!

இரவுகள் உன்னால்

நரகமானதே...!
இமைகளும் இப்போது
சுமைகளானதே...!!

இதயத்தின் துடிப்பு

இடியாய் கேட்குதே...!
உயிரும் உன்னால்
உடைந்து போகுதே...!!

சுவரங்கள் ஏழும் -உன்
குரலில் எதிரொலிக்குதே...!
நீ கொஞ்சம் சிரித்தால் -என்
நெஞ்சுக்குள் இசை தெறிக்குதே...!!

கண்ணே...! உன்னோடு வாழ
காத்திருக்கிறது என் உயிர்...!
நீ இல்லை என்றாலோ
நீடிக்காது இந்த உயிர்...!!

-----அனீஷ்...
SHARE THIS

6 comments: