1 Oct 2010

மத கத்திகள்



காற்றிலே மிதப்பவன் நீ...!
கல்லிலே இருப்பவன் நீ...!!
கல்லாகவே ஆனதென்ன...?
சூரியனாக ஒளிர்பவன் நீ...!
சுவாசமாக வருபவன் நீ...!!
சுவடே இல்லாமல் நடப்பதென்ன...?

இங்கே பகைமை தலையை கொய்ய,
இரத்தமோ மழையாய் பெய்ய,
இன்னும் அங்கே நீ செய்வதென்ன...?
உன் பெயரை சொல்லி ஊர் எரிய,
உயிர்கள் உயிருக்காய் போர் புரிய,
ஊமையாய் நீ சிரிப்பதென்ன...?

மனிதனை படைத்து நீ
கடவுளானாய்...!
மதங்களை படைத்து
மனிதர்கள் இப்போது
கடவுளானார்கள்...!!
பாவம் நீ...

மதங்கள் மதிக்கப்பட - அதற்காய்
மனங்கள் மிதிக்கப்பட
எல்லாமே இங்கு
தவறானதென்ன...?

உயிர்களை பறிப்பதும்
இதயங்களை உடைப்பதும்
அன்பை அறுப்பதும்தான்
மதங்களின் கடமையா...?

கிறிஸ்தவன்
கீதை படிக்கலாம்...!
அப்துல்லா
ஆலயத்திற்கு செல்லலாம்...!!
குருவாயூரப்பனின் பக்தன்
குல்லாவும் அணியலாம்...!!
தவறேதும் இல்லையே...
எல்லோருக்கும் இதை நீ
எப்போது சொல்லப்போகிறாய் கடவுளே...?

கடவுளே...!
மறைந்திருப்பதை விட்டுவிட்டு
இப்போதாவது நீ பேசு...!!
இல்லையென்றால்,
மனித ரத்தம் சொட்டும்
மனிதர்களின் மத கத்திக்கு
என்றாவது ஒருநாள்
நீயும் பலியாகவேண்டியிருக்கும்...

-----அனீஷ்...
SHARE THIS

6 comments:

  1. yes its true god shld open his eyes its already late

    ReplyDelete
  2. wow excellent kavidi, Oh God Listen him :)

    ReplyDelete
  3. அனைவருக்கும் நன்றி !

    ReplyDelete
  4. Nalla irykku Anish...
    Inimelavadhu madha veri oliyanum...
    Kalakureenga...!
    :)

    ReplyDelete
  5. :) anishka nathan
    :) Karthick
    :) Smitha
    :) Kaavya

    அனைவருக்கும் ரொம்ப நன்றி...!

    ReplyDelete