5 Jul 2011

ஒற்றை உயிராய்...


உன் தீண்டல் பார்வையில்
நான் பலியாகி,
உன் கூந்தல் போர்வையில்
நான் துயில் கொள்ள வேண்டும்...!

உன் முத்த சூட்டில்
நான் தீயாகி,
உன் நெஞ்சுக்கூட்டில்
நான் குளிர்காய வேண்டும்...!

சத்தமில்லாத முத்தத்தில்,
கத்தியில்லாத இந்த யுத்தத்தில்
நாம் இருவரும்
நமக்குள் தோற்க வேண்டும்...!

தொட்டு தழுவும்
என் கைகளுடன்,
விட்டு விலகாத
உன் வெட்கங்கள்
முட்டி மோத வேண்டும்..!

என் விரல்களுக்கு
வீரம் முளைக்க,
உன் விழியோரம்
வியர்வை துளிர்க்க,
உன் ஆணவ நெஞ்சு
என் ஐந்து விரல்களுக்குள்
அடங்கி போக வேண்டும்...!

உதடுகள் நான்கும்
ஊமை ரகசியம் பேச,
உன் இமை கதவுகளை - நீ
இழுத்து மூட,
எழுத்தில்லா கவிதையையொன்றை
உதடுகளால் - நான்
உன்னில் எழுத வேண்டும்...

சூடான மூச்சு
மோகம் பாய்ச்ச - உன்
மேடான பாகங்கள் - என்னை
அப்படியே சாய்க்க,
ஒற்றை திரியாய் - நாம்
பற்றி எரிய வேண்டும்...!

உன் உயிருக்குள்
நான் உருக,
என் உயிரோடு
நீ உறைய,
நம் உயிர்கள் இன்றே
ஒன்றாய் கலக்க வேண்டும்...!

----அனீஷ் ஜெ...
SHARE THIS

8 comments:

  1. அருமை பராட்டுக்கள்

    ReplyDelete
  2. @தமிழ்த்தோட்டம் : ரொம்ப நன்றி !! :)

    ReplyDelete
  3. ஐயயோ தெரியாமல் வந்துவிட்டனே =)) ரொம்ப வித்தியாசமா யோசிச்சிருக்கீங்க :P
    கவிதைக்கு :C :C :C :C :C

    ReplyDelete
  4. @Monika : ரொம்ப நன்றி ! ;)

    ReplyDelete
  5. ohooooo ungal ta enda feelings um eruka beautiful kavithai...:)

    ReplyDelete
  6. @anishka nathan : இதெல்லாம் ஒரு கேள்வியா??????? :P
    கருத்துக்கு ரொம்ப நன்றி... :)

    ReplyDelete
  7. Anish its really very nice...
    dont know wat else to say...
    unga rasanayey differenta irukku... ckramey u'll get recognition from all...
    Kalakurrenga...!
    :X :X :X
    :C :C :C

    ReplyDelete
  8. @Kaavya : ஏன் dont know னு சொல்றீங்க..? சும்மா எதாவது சொல்லுங்க =)) கருத்துக்கு ரொம்ப நன்றி...! :)

    ReplyDelete