21 Jul 2016

அவள்... கோலம்...


அன்றிரவு மட்டும்
அதிசயமாய் நீ
கோலம்போட வெளியே வந்தாய்...!
விடிந்துவிட்டதென நினத்து
சூரியனே உதித்துவிட்டது...!

உப்புதூளில் நிறம் சேர்ந்து
நீ கோலமொன்று போட்டாய்...!
எறும்புகள் அதை மொய்க்கிறது...

நீ வெட்கம் தெளித்த
உன் முக முற்றத்தில்
கோலமொன்று - நான்
போட வேண்டும்...!
முத்தங்களால்...

----அனீஷ் ஜெ...
SHARE THIS

3 comments:

  1. அற்புதம்
    படத்தை விடவும் கவிதை
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
  2. கலக்கல் கவிதை....
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. மிக அருமையான கவிதை

    ReplyDelete