![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_EAxtP5skaS_lCO8pLXi2w7P5ona2mQAlnb5Den1dpKIkmveqgXE1rbJC64qGt3gxlmFeAAywJOt-7bwyNKX6dcMnYP61a0xCZLARFcRktTOPYC-AL0KCRJXSBqGLdZBX0Mmx6QsaOxaA/s1600/goo-compressed.jpg)
கடவுள் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தான்...!
பூமியிலிருந்து வந்து - கடவுளின்
செவிகளின் நுழைந்தது...!
பல அலறல்களின் சத்தம்...
எட்டிநின்றே பூமியை
எட்டிப்பார்த்தான் கடவுள்...!
கூட்டமாய் சிலர்
குட்டிச் சாலையொன்றில் - ஒருவனை
வெட்டிச் சாய்த்துக்கொண்டிருந்தனர்...!
இன்னொரிடத்தில்
இளம்பெண்ணொருவள்
இருகால் மிருகத்திற்கு
இரையாகிக்கொண்டிருந்தாள்...!
மற்றொரிடத்தில்
மனசாட்சியில்லாத
மனித வெடிகுண்டொருவன்
மரணங்கள் நிகழ்த்திக்கொண்டிருந்தான்...!
கடவுளின் மனம் படபடத்தது...!
அத்தனைபேரையும் காப்பாற்றவேண்டும்...!
அவசரமாய் பூமியை நோக்கி ஓடினான்...!
பூமியின் வாசலில் வந்தவனுக்கு
எச்சரிக்கை பலகையொன்று தென்பட்டது...!
அதை வாசித்த கடவுளோ
அடுத்த நொடியே திரும்பிப்போனான்...!
எச்சரிக்கை பலகையில்
எழுதப்பட்டிருந்தது...!
“மனிதர்கள் ஜாக்கிரதை”...
----அனீஷ் ஜெ...
![](https://1.bp.blogspot.com/-mllm8XA2qPc/YHiHc3V7npI/AAAAAAAACw0/EI1FO9_QgCszC5dpB07dtlDTw84rmWH4gCLcBGAsYHQ/s0/glsbanner11.gif)
கவிதை அருமை...
ReplyDeleteEsteem lyrics so sweet
ReplyDelete