28 Apr 2011

நிலா வீடு !


அன்றும் நீ
வழக்கம்போல்
என்னுடன்
சிரித்துப்பேசிக்கொண்டிருந்தாய்...!

அமாவாசையா
இல்லை பவுர்ணமியா,
வளர்பிறை நாளா
இல்லை தேய்பிறை நாளா,
அன்று எந்த நாள் என்றுகூட
எனக்கு இப்போது ஞாபகமில்லை...!

திடீரென அன்று உனக்கு,
தினமும் இரவில் - உன்
மொட்டைமாடிக்கு மேல் உதிக்கும்
நிலவின் ஞாபகம் வந்தது...!

இருட்டு வானத்தில்
தனியே தத்தளிக்கும் நிலவில்,
நாம் மட்டும்
தனியே வசித்தால்
எப்ப்டியிருக்கும் என கேட்டாய் நீ...

சிரித்தேன் நான்...!
நீல் ஆம்ஸ்டாங்குக்கு முன்னே
நீயும் நானும் பிறந்திருக்கவேண்டும்...

என் பதிலுக்கு காத்திராமல்
நீயே பேசத்தொடங்கினாய்...!

எவரும் இல்லாத நிலவு..!
எதிர்ப்புகளே இல்லாத காதல்..!!
மவுனம் உடைக்கும் பேச்சுக்கள்...!
வெட்கத்தை மறந்த தீண்டல்கள்...!!
ஏதேதோ சொன்னாய் நீ...

உன் மடிமேலே
என் தலைசாய வைத்து
நீ என்
தலைகோதி விடவேண்டும்...!
வெட்கம் சிவக்கும்
உன் கன்னங்களில்
நான் என் உதடுகளால்
கவிதை எழுத வேண்டும்...!!
நானும் என்
ஆசைகளை அடுக்கினேன்...!

வெட்கப் புன்னகை
பூத்தாய் நீ...

நாள் முழுவதும்
உன் அருகில்
நான் வேண்டும்...!
நிலவு உடைந்து
நம் உயிர் பிரியும் வரை
நீயும் நானும்
காதல் செய்ய வேண்டும்...!!
நீயும் உன் ஆசைகளை
என்னிடம் சொல்ல மறக்கவில்லை...!

உன் மடியிலே
என் மரணம் வேண்டுமென
நான் சொல்ல,
அதை நீ ஏற்றுக்கொள்ளாமல்
நான் சொன்னதையே
நீயும் திருப்பிசொல்ல,
காதலுக்கிடையிலும்
நாம் இருவரும்
கண்ணீர்விட்டது அன்றுதான்...!

ஈர முத்தத்தால்
இருவரும் மாற்றிமாற்றி
விழிகளை துடைத்துக்கொள்ள,
உன் எண்ணம் எல்லாம்
இன்னும் நிலவிலே இருந்தது...!

மீண்டும்
உன் ஆசைகளுடன்
கற்பனைகள் கலக்க,
அன்று இரவில்
நம் பேச்சில் முழுவது
நிலாவீடே
நம் வசிப்பிடமானது...!

அந்த நிலவுப்பயணத்தை
அழகாய் நான் கவிதையாக்கி
அன்று எழுதிய வரிகளில் சில
இன்றும் எனக்கு ஞாபகமிருக்கிறது...!

ஒற்றை நிலவை
ஒரே இரவில்
நாம் சுற்றிவந்தோம்..!
இரவு விடிந்ததும்,
நாம் கற்பனையிலே
நிலவில் நாம் ஒரு
வாழ்க்கையை
வாழ்ந்து முடித்திருந்தோம்...!!

அந்த தருணங்களின்
ஒவ்வொரு நொடியும்,
இன்னும் எனக்கு
ஞாபகமிருக்கிறது...!

இப்பொழுதும்
மொட்டைமாடிக்கு மேல்
நிலவு உதிக்கிறது...!

நிலவை சுமந்துகொண்டே
பல இரவுகள் நீள்கிறது...!

நினைவுகளை சுமந்துகொண்டு
இன்னும் நான் மிச்சமிருக்கிறேன்...!

நான்...!!
நிலவு...!!
இரவு...!!!
எல்லாமே இருக்கிறது இங்கு...!
தனியாக...

ஆனால்
இன்னொரு நிலாப்பயணம் போக,
நீ மட்டும் இல்லை...!
என்னிடம்...

----அனீஷ் ஜெ...

SHARE THIS

6 comments:

  1. good memory .....sweet memories never forgotten ...yarukum marakadu edu maduri payanam....romba thrilling aa eruku..:))

    ReplyDelete
  2. @anishka nathan: நன்றி...!!!

    ReplyDelete
  3. சோகம் தெரிகிறது........நிலவு தேய்ந்து வாழ்வது போல் உங்கள் துன்பங்களும் தேய்ந்து போகட்டும் இன்பங்கள் மாற்றங்கள் வளரட்டும்.

    ReplyDelete
  4. @நிலாமதி: ரொம்ப நன்றி...!

    ReplyDelete
  5. So nice... very touching Anish...
    Kalakureenga...!
    :C :C :C

    ReplyDelete
  6. @Kaavya : ரொம்ப நன்றி...!!! :)

    ReplyDelete