
ஒரு பார்வைதான் பார்த்தான்...!
உயிரில் தீயின் துளி
கொழுந்துவிட்டு எரிகிறது...!
கூடலில்லை...!
கூடிக்களிக்கவில்லை...!!
ஆனாலும் அவன்
விழிகளால் பிரசவிக்கிறேன்...!!!
வெட்கங்களை...
அதிகாரமோ இல்லை
அடங்கிப்போவதோ
என்னை கட்டுப்படுத்த - அவன்
பார்வைகளூக்கே சாத்தியப்படுகிறது...!
அவன் கண்பார்த்து பேச
ஆசையிருந்தாலும்
மண்பார்க்கவே - என்
மனம் சொல்கிறது...!
விழிகளுக்கும் சூரியனுக்கும்
வித்தியாசமில்லை...!
கடும்பாறை என் நெஞ்சில்
பெரும் மழையாய் வழிகிறது...!
அவன் பார்த்த பார்வை...
----அனீஷ் ஜெ
Written By : Anish J.
Requested By : Havisha.
Send Your Comments on Whatsapp. Click Here
அருமை...
ReplyDeleteபார்வை விளைவித்த மாறுதல்களும்
ReplyDeleteஅது தந்த கவிதையும் மிக மிக அருமை
வாழ்த்துக்களுடன்...
அருமை
ReplyDeleteஎன் காதலியின் அன்புப்பார்வையும் இதே தான் கவிஞரே......
ReplyDeleteஅருமை
ReplyDeleteமிக அருமை நண்பா
ReplyDeleteமிக அருமை
ReplyDeleteSuper
ReplyDeleteகாதல் கவிதை நூல்கள் எனக்கு பிடித்து
ReplyDelete