7 Sept 2016

தற்கொலை !


எதிரில் நீ வந்தால்
என் மனமோ - உன்
விழிக்குளத்தில்
விழ குதிக்கிறது....!

உன் புன்னகை கண்டால்
உயிருக்குள் எங்கோ
நஞ்சு பரவுவதுபோல
நடுக்கம் தெரிகிறது....!

கடைக்கண் பார்வை வீசி - நீ
கடந்து செல்லும் போது - என்
குட்டி இதயமோ கத்தியால்
குத்தி கிழிகிறது...!

கனவுகள் எனது
கழுத்தை இறுக்கும்போது - என்
மூச்சுக்காற்றோ - உன்
முகம் தேடுகிறது...!

நான் உயிர்வாழச்செய்கிறது...!
உன்னால் நான் தினம் செய்யும்
இந்த தற்கொலைகள்...!

----அனீஷ் ஜெ...
SHARE THIS

6 comments:

  1. Kavithai super but tharkolai nu vadivam athuku kodukanuma anish..verethum Kura mudiyatha...

    ReplyDelete
  2. Super bro...arumai

    ReplyDelete
  3. தற்கொலையே அவள் விழியால்தான்

    ReplyDelete