13 Nov 2011

இதயம் விற்பனைக்கு...


ஆங்காங்கே
வலியின் உணர்வுகள்...!

சில இடங்களில்
ஏமாற்றத்தின்
அடையாளங்கள்...!

துடிப்பதற்கு மட்டுமல்ல...!
அழுவதற்கு கூட
இதற்கு தெரியும்...!

எல்லாவற்றையும்
எளிதில் நம்பிவிடும்...!
ஏமாற்றங்களை கூட
தாங்கிவிடும்...!!

நேசிக்கவும்,
நேசிப்பவர்களுக்கும் சேர்த்து
சுவாசிக்கவும் தெரியும்...!

நீங்கள் தரும்
அன்பு மட்டுமே - இதன்
அதிகபட்ச விலை...!

திருப்பி தரமாட்டோம் என்ற
உத்திரவாதத்துடன்,
யார் வேண்டுமானாலும்
உரிமையாக்கி கொள்ளலாம்...!

என் இதயம் விற்பனைக்கு...

----அனீஷ் ஜெ...
SHARE THIS

23 comments:

  1. நல்ல விளம்பரம். நிச்சயம் உங்கள் இதயம் நல்ல விலைபோகும்

    ReplyDelete
  2. @அம்பலத்தார்: நல்ல விலை என்று நீங்கள் சொல்லும் விலையை கூட நான் கவிதையிலே குறிப்பிட்டுள்ளேன்...!
    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

    ReplyDelete
  3. நல்லாயிருந்தது...

    வாடகைக்கா?

    ReplyDelete
  4. //நேசிக்கவும்
    நேசிப்பவர்களுக்கும் சேர்த்து
    சுவாசிக்கவும் தெரியும்//
    அருமையான உணர்வுபூர்வ வரிகள்.

    ReplyDelete
  5. @ரெவெரி: ஹாஹா என்னமோ வீடு வாடகைக்கானு கேக்குறமாதிரி கேக்குறீங்க..? =))=))
    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி தோழரே...! :)

    ReplyDelete
  6. @சித்தாரா மகேஷ்: உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க...! :)

    ReplyDelete
  7. anish sirichchittaen ponga....
    anish niraiya peru propose pannidap poranga anish...parththu irunthukonga nanbaa...

    anish intha kavithaikku naan niraiya response varumnnu ninaikkiren.....

    indirect aa anish yarukittayo kettu irukkum kaelvi .... anish sollungalen who is that lucky girl nnu .....

    vazththukkal ungal idaiyam nalla oru anbana ungalip purinthu kollak kudiya idyaththidam vilaip poga ....

    ReplyDelete
  8. anish kavithai superb...superb...ella lines um good,,,,

    ReplyDelete
  9. உங்களது எண்ணத்தூறல்களில் சிந்திய இந்த சிறிய (க)விதை எண்ணங்களை தூவி செல்கிறது என் மனதில் ...
    வியக்க வரிகள் தல...அதில் நான் லயித்து போனேன் ..

    உங்களின் மனங்கவர் பெண்ணுக்கு எனது வாழ்த்துக்களை கூறிக்கொள்ளுங்கள் ..

    ReplyDelete
  10. என்னாது இதயத்தை ஏலத்தில போட்டிட்டாரா கவிக்கா?...:))))

    ReplyDelete
  11. ஒழுங்கான இதயத்தையே இந்தக்காலத்தில வங்கப்பயப்புடுவாங்க.... இது கசங்கி அங்காங்கு ஓட்டையும் இருக்கென முந்தி ஒரு கவிதையில சொன்ன ஞாபகம்... அப்படிப்பட்ட இதயத்தை இப்ப ஏலம் விட்டிருக்கிறீங்க.... எங்காவது ஒரு ......... மாட்டாமல் போகாது.... சாரி மன்னிச்சுக்கொள்ளுங்க வாங்காமல் போகமாட்டா அப்பூடீன்னேன்.....

    ஹையோ வழிவிடுங்க வழிவிடுங்க... ஆடு வித்து மாடு வித்து இப்ப மனிச இதயமாமே... இந்தப்பக்கம் வரவே பயமாக்கிடக்கெனக்கு..:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R

    ReplyDelete
  12. @kalai: //anish niraiya peru propose pannidap poranga anish...//
    இந்த கவிதையை பார்த்து எல்லாம் யாரும் propose பண்ணிடமாட்டாங்க... பொண்ணுங்க என்ன அவ்வளவு weak ஆவா இருக்காங்க... ;);)

    //anish sollungalen who is that lucky girl nnu //
    நீங்க சொல்ற lucky girl யாருனு நேரம் வரும்போது சொல்றேன்...! :T:T:T:T:T

    //vazththukkal ungal idaiyam nalla oru anbana ungalip purinthu kollak kudiya idyaththidam vilaip poga ....//
    ஆஹா.... சரி சரி... உங்கள் வாழ்த்துக்கு நன்றி நன்றி...!!

    //anish kavithai superb...superb...ella lines um good,,,,//
    ரொம்ப நன்றி கலை...! :)

    ReplyDelete
  13. @Vinisha: முதல் வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க...! :)

    ReplyDelete
  14. @அரசன்: என்ன தல... அண்ணிக்கு மட்டும் வாழ்த்து சொன்னா போதுமா? எனக்கு வாழ்த்து இல்லையா? ;);) ஹ்ம்ம்ம் சும்மா தமாசுசுசுசுசு :D:D
    வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றி தல...!

    ReplyDelete
  15. @athira: //என்னாது இதயத்தை ஏலத்தில போட்டிட்டாரா கவிக்கா?.//
    ஹை கரெக்டா கண்டுபிடிச்சிட்டீங்களே.... :C:C

    //ஒழுங்கான இதயத்தையே இந்தக்காலத்தில வங்கப்பயப்புடுவாங்க.... இது கசங்கி அங்காங்கு ஓட்டையும் இருக்கென முந்தி ஒரு கவிதையில சொன்ன ஞாபகம்... அப்படிப்பட்ட இதயத்தை இப்ப ஏலம் விட்டிருக்கிறீங்க....//
    நீங்க எந்த காலத்தில் இருக்குறீங்க..? நீங்க சொல்றதுலாம் ஆயிரத்து தொள்ளாயிரத்து அன்னிக்கு...! இப்போ நல்ல இருக்குறதை விட ஒடைஞ்சதுக்குதான் கிராக்கி அதிகம் =)=)

    // எங்காவது ஒரு ......... மாட்டாமல் போகாது.... //
    :S:S:S:S:S

    // ஆடு வித்து மாடு வித்து இப்ப மனிச இதயமாமே... இந்தப்பக்கம் வரவே பயமாக்கிடக்கெனக்கு//
    நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்லை... சாரி டயலாக் மாறி போயிடிச்சு... வாங்குறதுக்கு ஆள் இருந்தா விக்குறது தப்பே இல்லை... :R:R:R:R:R

    உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)

    ReplyDelete
  16. அட எப்படி வெருட்டினாலௌம், கவிக்கா விற்கத்தான் பார்க்கிறார்.... சரி வாங்கிப்போறவங்களிட்ட அடகு வச்சிடாதீங்க வட்டிக்கடையில என சைன் வாங்கிப்போட்டு வில்லுங்க.... சாட்சிக்கு கை எழுத்து தேவைப்பட்டால் நான் வாறேன்....:T:T:T

    இப்போ உடைஞ்சதுக்கோ கிராஆஆஆஆஆஆஆக்கி அதிகம்? அப்போ நேரே கராஜ்ஜில தான் விடோணும், வீட்டுக்குள் எடுக்கேலாது.....

    எங்கிட்டயேவா..... வழிவிடுங்க தேம்ஸ் என்னை அழைக்குது:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R

    ReplyDelete
  17. @athira://சரி வாங்கிப்போறவங்களிட்ட அடகு வச்சிடாதீங்க வட்டிக்கடையில என சைன் வாங்கிப்போட்டு வில்லுங்க....//
    இதயத்தை தானே சொல்றீங்க? :Y:Y:Y:Y:Y

    // சாட்சிக்கு கை எழுத்து தேவைப்பட்டால் நான் வாறேன்//
    இந்த “சாட்சி கையெழுத்து”nu நீங்க சொல்றதுல ”உள்குத்து” எதுவும் இல்லையே..? :Q:Q:Q:Q:Q

    //வழிவிடுங்க தேம்ஸ் என்னை அழைக்குது//
    நடு ராத்திரி வேற... அழைக்குறது வீட்டுக்கு வெளியே நிக்குற கொள்ளிவாய் பிசாசா இருக்க போகுது பார்த்து... =))=))

    மிக்க நன்றி :)

    ReplyDelete
  18. romba naal kalithu arumaiyana varigal.. unga ithayama .. virka vendam anish.. unga heart avvalu malivanathu illai.. kandipaga vilaimathipu illathathu .. yaro antha alagiya thevathathai varuval katthu irungal.. lovely lines anish..

    ReplyDelete
  19. @kilora: எல்லா இதயங்களும் விலை மதிப்பில்லாதது தான்...
    ஹ்ம்ம்ம்... நீங்க சொல்ற மாதிரி காத்திருந்தா போச்சு... ;);)
    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

    ReplyDelete
  20. @ஹிஷாலீ: வாங்க...

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி... :)

    ReplyDelete
  21. Super kalakureka poka

    ReplyDelete